மலிவு விலை சீன பொம்மைகளால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புமலிவு விலை சீன பொம்மைகளால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்பு ... நாட்டின் தேயிலை உற்பத்தி 15.50 கோடி கிலோவாக உயர்வு நாட்டின் தேயிலை உற்பத்தி 15.50 கோடி கிலோவாக உயர்வு ...
இந்திய அரிசி, நிலக்கடலை மீதான தடையை ரஷ்யா நீக்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
01:03

புதுடில்லி:இந்தியாவில் இருந்து அரிசி, நிலக்கடலை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, ரஷ்யா நீக்கியுள்ளது. இது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அரிசியில் வண்டுகளும், நிலக்கடலையில் நிர்ணயிக்கப்பட்டதை விட, "அப்லடாக்சின்' என்ற நச்சுப் பொருளும் அதிகம் உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.இதையடுத்து, கடந்த ஜனவரியில், இந்திய அரிசி, நிலக்கடலை ஆகியவற்றின் இறக்குமதிக்கு, ரஷ்யா தடை விதித்தது.இந்த தடையை நீக்க வேண்டும் என, இந்தியா கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பாக, கடந்த ஜூன் மாதம், ரஷ்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இந்தியா வந்து, உணவு தானியங்களை பதப்படுத்தும் தொழிலகங்களை பார்வையிட்டனர்.அப்போது, உணவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, ரஷ்யக் குழுவினர் திருப்தி தெரிவித்ததாக, மத்திய உணவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
இதையடுத்து, ரஷ்ய அரசு, இந்திய அரிசி, நிலக்கடலை ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.இந்த உத்தரவு, நடப்பு செப்டம்பர் 1ம் தேதி முதல், முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க, அதிக அளவில் ஏற்றுமதி மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவிற்கான அரிசி, நிலக்கடலை ஏற்றுமதி மீண்டும் துவங்கியுள்ளது என, அந்த அதிகாரி மேலும் கூறினார். இந்தியா, அரிசி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியா, 61 ஆயிரம் டன் அரிசி, 3,700 டன் நிலக்கடலை ஆகியவற்றை, ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்து, 3.10 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)