இந்திய அரிசி, நிலக்கடலை மீதான தடையை  ரஷ்யா நீக்கியதுஇந்திய அரிசி, நிலக்கடலை மீதான தடையை ரஷ்யா நீக்கியது ... விமான பயணத்தை ரத்துசெய்தால் ரூ.1,500 அபராதம் விமான பயணத்தை ரத்துசெய்தால் ரூ.1,500 அபராதம் ...
நாட்டின் தேயிலை உற்பத்தி 15.50 கோடி கிலோவாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
01:06

புதுடில்லி:சென்ற ஜூலையில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 16 சதவீதம் அதிகரித்து, 15.50 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 13.30 கோடி கிலோவாக இருந்தது.மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால், நாட்டின் ஒட்டு மொத்த தேயிலை உற்பத்தி உயர்ந்துள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மேற்கு வங்கத்தின் தேயிலை உற்பத்தி, 26.89 சதவீதம் உயர்ந்து, 3.28 கோடி கிலோவில் இருந்து, 4.17 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 20.20 சதவீதம் அதிகரித்து, 7.71 கோடி கிலோவில் இருந்து, 9.29 கோடி கிலோவாக உயர்ந்து உள்ளது.இதே காலத்தில், தென்னிந்தியாவின் தேயிலை உற்பத்தி, 17.86 சதவீதம் சரிவடைந்து, 1.68 கோடி கிலோவாக குறைந்துள்ளது.சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு, 87 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.உலகில் தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வில், இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற நிதியாண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 3.62 சதவீதம் அதிகரித்து, 109.50 கோடி கிலோவில் இருந்து, 113.50 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)