தங்கம் விலை ரூ.40 குறைந்ததுதங்கம் விலை ரூ.40 குறைந்தது ... "கோல்டு இ.டி.எப்' திட்டங்களுக்கு வரவேற்பு குறைகிறது "கோல்டு இ.டி.எப்' திட்டங்களுக்கு வரவேற்பு குறைகிறது ...
கர்நாடகா அரிசி வரத்தால் விலை குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
15:28

கடலூர்:கர்நாடகா மாநில அரிசி வருகை அதிகரிப்பால், தமிழகத்தில் உயர்ந்து வந்த அரிசி விலை குறைந்து வருகிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் காவிரி டெல்டா பகுதியில் அபரிமிதமான விளைச்சல் தரும் சம்பா போகம் கடும் பாதிப்பிற்குள்ளானது. நிலத்தடி நீர் உள்ள தாலுகாக்களில் மட்டும் நெல் விளைச்சல் இருந்தது. இதனால் நெல் விலை கடுமையாக உயர்ந்தது.மார்க்கெட்டில் உயர்ந்து வரும் அரிசி விலையக் குறைக்க, தமிழக அரசு மலிவு விலை அரிசியை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்தது. நுகர்பொருள் வாணிபக் கடைகள் மட்டுமல்லாமல் கூட்டுறவு அங்காடிகள் மூலம் அரிசி விற்பனை செய்யப்பட்டது.மலிவு விலை அரிசிஆனால், தரமில்லாத அரிசி விற்கப்பட்டதால் மக்கள் மத்தியில் வரவேற்பில்லாமல் போனது. இதனால் மலிவு விலை அரிசி விற்பனை படிப்படியாக மந்தமானது. தற்போது சி.ஆர்.1009 என்ற இட்லி அரிசி மட்டும் விற்பனையாகிறது. அதுவும் மாவட்டம் முழுவதும் 500 கிலோ மட்டுமே விற்பனையாகிறது.

இதனால் வெளி மார்க்கெட்டில் அரிசி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.கர்நாடகா அரிசி வரத்துஇந்நிலையில், தற்போது கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரிசி வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் அரிசி விலை கணிசமாக குறைந்துள்ளது. ஏற்கனவே விற்பனையான பி.பி.டி., அரிசி கிலோ 44 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக குறைந்துள்ளது. டீலக்ஸ் கிலோ 38லிருந்து 30 ரூபாயாகவும், ஐ.ஆர்.50 ரகம் 30 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைந்துள்ளது. கர்நாடகா அரிசியில் இரு வேறு அரிசி ரகங்கள் கலந்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநில அரிசி என்பதால் அதற்கு "சோனா' என பெயரிட்டு விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.ஸ்டீம் பாயில் அரிசிவெளி மாநில அரிசி விலை குறைந்திருந்த போதிலும், உள்ளூர் அரிசி விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. காரணம், புதிய நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் அரிசியே இந்த விலை குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் நெல்லை ஊற வைத்து அவியல் போட்டு உருவாக்கப்படும் அரிசி தரமாக இருப்பதோடு, நீண்ட நேரம் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது.ஆனால், அதிக நேரம் வேக வைக்க வேண்டியுள்ளதால் இல்லத்தரசிகள் இதுபோன்ற அரிசியை விரும்புவதில்லை. நெல்லை ஊறல் போடாமலேயே நீராவியைக் கொண்டு வேகவைத்து அரைக்கப்படும் அரிசியில், குறைந்த நேரத்தில் சாதம் சமைக்க முடிகிறது என்பதால் ஸ்டீம் அரிசியை விரும்பி வாங்கும் நிலை உள்ளது. இதனால் உள்ளூரில் தயாரிக்கப்படும் அரிசி கிலோ ஒன்று 3 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. குறுவை அறுவை துவங்கினால் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)