பதிவு செய்த நாள்
12 செப்2013
00:54
மும்பை:கடந்த ஒரு சில வர்த்தக தினங்களாக, நாட்டின் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இந்நிலையில், உலகின் ஒரு சில நாடுகளில், பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டதையடுத்து,நேற்று, இந்திய பங்குச் சந்தைகளில், பங்கு வியா பாரம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில்,மோட்டார் வாகனம், மருந்து உள்ளிட்ட பல துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
அன்னிய நிதி நிறுவனங்கள் சென்ற செவ்வாய் கிழமையன்று மட்டும், 2,564கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன என,"செபி' அமைப்பின் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 0.36 புள்ளிகள் உயர்ந்து, 19,997.45 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,055.53 புள்ளிகள் வரை யிலும், குறைந்தபட்சமாக, 19,777.63 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும்,30 நிறுவனங்களுள், டாட்டா ஸ்டீல், ஹிண்டால்கோ, சன்பார்மா உள்ளிட்ட, 18 நிறுவனப்பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டாமோட்டர்ஸ், எச்.யு.எல்., ஐ.டி.சி., உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்கு களின் விலை குறைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி',16.40 புள்ளிகள் அதிகரித்து,5,913.15 புள்ளிகளில் நிலை கொண் டது.வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,924.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,832.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|