உள்நாட்டில் சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்தது:"உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தின் எதிரொலிஉள்நாட்டில் சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்தது:"உங்கள் பணம் உங்கள் ... ... உருக்கு பயன்பாடு 3கோடி டன்னாக உயர்வு உருக்கு பயன்பாடு 3கோடி டன்னாக உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகத்தில் ஏற்ற, இறக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
00:54

மும்பை:கடந்த ஒரு சில வர்த்தக தினங்களாக, நாட்டின் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இந்நிலையில், உலகின் ஒரு சில நாடுகளில், பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டதையடுத்து,நேற்று, இந்திய பங்குச் சந்தைகளில், பங்கு வியா பாரம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில்,மோட்டார் வாகனம், மருந்து உள்ளிட்ட பல துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
அன்னிய நிதி நிறுவனங்கள் சென்ற செவ்வாய் கிழமையன்று மட்டும், 2,564கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன என,"செபி' அமைப்பின் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 0.36 புள்ளிகள் உயர்ந்து, 19,997.45 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,055.53 புள்ளிகள் வரை யிலும், குறைந்தபட்சமாக, 19,777.63 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும்,30 நிறுவனங்களுள், டாட்டா ஸ்டீல், ஹிண்டால்கோ, சன்பார்மா உள்ளிட்ட, 18 நிறுவனப்பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டாமோட்டர்ஸ், எச்.யு.எல்., ஐ.டி.சி., உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்கு களின் விலை குறைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி',16.40 புள்ளிகள் அதிகரித்து,5,913.15 புள்ளிகளில் நிலை கொண் டது.வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,924.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,832.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)