பதிவு செய்த நாள்
12 செப்2013
00:56
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதிஆண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, முதல் ஐந்து மாத காலத்தில், நாட்டின் உருக்கு பயன்பாடு, வெறும், 0.3 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி கண்டு, 3.03கோடி டன்னாக உயர்ந்து உள்ளது.
மந்தநிலை:இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3.02கோடி டன்னாக இருந்தது என, மத்திய உருக்கு அமைச்ச கம் தெரிவித்து உள்ளது.பொருளாதார மந்தநிலை காரணமாக, மோட்டார் வாகனம் மற்றும் கட்டுமான துறைகளில், உருக்கிற்கானதேவை மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாகவே, மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டில், உருக்கு பயன்பாடு சிறிதளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது.
கணக்கீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 4.9 சதவீதம் அதிகரித்து,3.18கோடி டன்னிலிருந்து,3.33கோடி டன்னாக உயர்ந்து உள்ளது. அதேசமயம், உருக்கு ஏற்றுமதி,19.19 லட்சம் டன்னிலிருந்து,18.65 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது.இதேபோன்று, இதன் இறக்குமதியும், 28.2 சதவீதம் குறைந்து, 33.57 லட்சம் டன்னிலிருந்து, 24.10 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது.
மதிப்பீடு:சென்ற 2012-13ம் நிதிஆண்டில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு, 3.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7.33 கோடி டன்னாக இருந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதன் பயன்பாடு,6-7 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டது.உள்நாட்டில், உருக்கு தயாரிப்பில், செயில் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, கணக்கீட்டு காலத்தில், 0.3 சதவீதம் உயர்ந்து, 41.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|