உள்நாட்டில் சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்தது:"உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தின் எதிரொலிஉள்நாட்டில் சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்தது:"உங்கள் பணம் உங்கள் ... ... முக்கிய ஆறு துறைகளில்வேலைவாய்ப்பு அதிகரிப்பு:ஜவுளி,தோல் துறைகள் முன்னிலை முக்கிய ஆறு துறைகளில்வேலைவாய்ப்பு அதிகரிப்பு:ஜவுளி,தோல் துறைகள் ... ...
உருக்கு பயன்பாடு 3கோடி டன்னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
00:56

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதிஆண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, முதல் ஐந்து மாத காலத்தில், நாட்டின் உருக்கு பயன்பாடு, வெறும், 0.3 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி கண்டு, 3.03கோடி டன்னாக உயர்ந்து உள்ளது.
மந்தநிலை:இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3.02கோடி டன்னாக இருந்தது என, மத்திய உருக்கு அமைச்ச கம் தெரிவித்து உள்ளது.பொருளாதார மந்தநிலை காரணமாக, மோட்டார் வாகனம் மற்றும் கட்டுமான துறைகளில், உருக்கிற்கானதேவை மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாகவே, மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டில், உருக்கு பயன்பாடு சிறிதளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது.
கணக்கீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 4.9 சதவீதம் அதிகரித்து,3.18கோடி டன்னிலிருந்து,3.33கோடி டன்னாக உயர்ந்து உள்ளது. அதேசமயம், உருக்கு ஏற்றுமதி,19.19 லட்சம் டன்னிலிருந்து,18.65 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது.இதேபோன்று, இதன் இறக்குமதியும், 28.2 சதவீதம் குறைந்து, 33.57 லட்சம் டன்னிலிருந்து, 24.10 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது.
மதிப்பீடு:சென்ற 2012-13ம் நிதிஆண்டில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு, 3.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7.33 கோடி டன்னாக இருந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதன் பயன்பாடு,6-7 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டது.உள்நாட்டில், உருக்கு தயாரிப்பில், செயில் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, கணக்கீட்டு காலத்தில், 0.3 சதவீதம் உயர்ந்து, 41.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)