பதிவு செய்த நாள்
12 செப்2013
01:11
மும்பை:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜவுளி உள்ளிட்ட முக்கிய ஆறு துறைகளில்,வேலைவாய்ப்பு, 0.28 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு துறைகளில்,வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், நாட்டில் பெருகியுள்ளவேலைவாய்ப்பு குறித்து, மத்திய தொழிலாளர் அமைச்சகம், ஆய்வுமேற்கொண்டது.
ஆயத்த ஆடைகள்:அதிக அளவில் தொழிலாளர்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள எட்டு துறைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இத்துறைகளைச் சார்ந்த,2,301 தொழிற்சாலைகளில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இதில், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், ஆயத்த ஆடை களை உள்ளடக்கிய, ஜவுளித் துறையின் வேலை வாய்ப்பு, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 0.72 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பது தெரியவந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில்,மேற்கண்ட துறையில், 88 ஆயிரம்பேர்வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர். சென்ற முழு நிதிஆண்டில், இத்துறையில், 1.40 லட்சம்பேர்வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.ஜவுளித் துறையை அடுத்து, ஏற்று மதி வாய்ப்பு அதிகம் உள்ளதோல் துறையில்,வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலாண் டில்,தோல் துறையில், 18 ஆயிரம் தொழிலாளர்கள்வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 14 ஆயிரமாக இருந்தது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப் பின் சரிவை, ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் உள்ள ஜவுளி,தோல் பொருட்கள் துறைகள் நன்கு பயன்படுத்திக் கொண் டுள் ளன. இவை, ஏற்றுமதியில் தீவிரம் காட்டியதால், அதிக அளவில் பணியாட்களை நியமித்தன.
நவரத்தினங்கள்:இதன் காரணமாகவே,மேற்கண்ட இரு துறைகளில்வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், வாகனம் மற்றும் நவரத்தினங்கள், ஆபரணங்கள் துறைகளில், தலா, 8,000பேர்வேலைவாய்ப்பு பெற்றுள் ளனர். தகவல் தொழில்நுட்பம், பீ.பி.ஓ., துறைகளில், 3,000 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்துள்ளது.
கைத்தறி: கைத்தறி துறையில்,வேலைவாய்ப்பு அதிகரிக்கவோ, குறையவோ இல்லை. அதே சமயம், உலோகம் மற்றும்போக்குவரத்து துறைகளில்,வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. கர்நாடகா,கோவா ஆகிய மாநிலங்களில், சுரங்க நடவடிக்கை களுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பணி வாய்ப்பு குறைந்துள்ளது. குறிப்பாக, உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட உலோக துறைகளில்,வேலைவாய்ப்பு பெருமளவு சரிவடைந்து உள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில்,மேற்கண்ட எட்டு துறைகளில், நிகர அளவில், 86 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள னர்.இதே காலத்தில், நிறுவனங்கள் மூலம்,நேரடியாக, 1.06 லட்சம்பேர் பணிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம், இதே காலத்தில், ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரம் குறைந்துள்ளது.
ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களில், 1.21 லட்சம்வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அதே சமயம், ஏற்றுமதி சாராத நிறு வனங்களில், 34 ஆயிரம்வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. கடந்த2012ம் ஆண்டு ஜூலை முதல், நடப்பு 2013ம் ஆண்டு ஜூன் வரையிலான ஓராண்டில், ஜவுளி துறையின் ஏற்றுமதி, 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
தொழிலாளர்கள்:அதற்கேற்ப,இத்துறையின்வேலைவாய்ப்பும், 1.78 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், 1.73 லட்சம் பேர், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவது குறிப்பிடத் தக்கது. இதே காலத்தில், நிறுவனங்களில் நேரடி யாக, 2.95 லட்சம்பேர் நியமிக்கப் பட்டுள்ள னர். ஒப்பந்த தொழிலாளர்களின் நியமன எண்ணிக்கை,66 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது.இது,ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து, ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று குரல்எழுப்பி வரும் தொழிற்சங்கங்களின்கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|