பதிவு செய்த நாள்
12 செப்2013
15:50
புதுடில்லி : நடப்பாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்தநிலை போன்றவற்றை சில சிறிய அளவிலான பொருளாதார சீர்திருத்தங்கள் மூலமே சரி செய்ய முடியும், இவற்றை ஒரே நாளில் சரி செய்ய முடியாது. தற்போது நிலவும் பிரச்னைக்கு 20 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் தான் காரணம் என்று கூறுவதும் தவறு. நமது அடிப்படை பலமாகவே உள்ளது. இப்போதைய தேவை சிறிய அளவிலான சீர்திருத்தங்கள் தான். நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாகத்தான் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இது குறைவானதே, தற்போதைய உலக சூழலில் இந்த அளவு வளர்ச்சி என்பது சாதாரணமாதும் அல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|