பதிவு செய்த நாள்
12 செப்2013
17:24
மும்பை : கடந்த ஐந்து தினங்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(செப்.12ம் தேதி) சரிவுடன் முடிந்துள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில் ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் பின்னர் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்க தொடங்கியதால் சரிவடைய தொடங்கின. மேலும் ரூபாயின் மதிப்பில் சிறிய சரிவு இருந்ததால் வர்த்தகநேர இறுதியிலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 215.57 புள்ளிகள் சரிந்து 19,781.88-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 62.45 புள்ளிகள் சரிந்து 5,850.70-ஆகவும் சரிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் ஐசிஐசிஐ., ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பெல், கோல் இந்தியா, இன்போசிஸ், எஸ்.பி.ஐ., மாருதி சுசூகி ரிலையன்ஸ் உள்ளிட்ட 23 பங்குகள் விலை சரிவில் முடிந்தன.
முன்னதாக கடந்த ஐந்து தினங்களாக சென்செக்ஸ் 1,758 புள்ளிகள் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|