பதிவு செய்த நாள்
13 செப்2013
00:56
மும்பை : வரும் 2017ம் ஆண்டிற்குள், ஊடக துறையின் சந்தை மதிப்பு, ஆண்டுக்கு சராசரியாக, 18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,24,500 கோடி ரூபாயாக உயரும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் பிரைஸ்வாட்டர் கூப்பர்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய ஊடக துறை, நவீனமயமாகி வருகிறது. குறிப்பாக, மண்டல அளவில், சிறந்த பொழுது போக்கு அம் சங்களான, சினிமா, "டிவி', உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நவீன தொழில் நுட்பத் திற்கு, மாறி வருகின்றன. இது, இத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிவதாக அமைந்துள்ளது.
சென்ற 2011ம் ஆண்டில், இந்திய ஊடக துறையின் சந்தை மதிப்பு, 80,500 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2012ம் ஆண்டில், 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 96,500 கோடிரூபாய் அளவிற்கு உயர்ந்து உள்ளது.குறிப்பாக, மதிப்பீட்டு ஆண்டுகளில்,"டிவி' துறையின் சந்தை மதிப்பு, 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 34 ஆயிரம் கோடி யிலி ருந்து, 38,300 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.இதே போன்று, சிறந்த பொழுது போக்கு அம்சமான, சினிமா துறையின் சந்தை மதிப்பு, 17 சதவீதம் அதிகரித்து, 9,600 கோடி ரூபாயிலிருந்து, 11,200 கோடி ரூபாயாக அதி கரித்து உள்ளது.
சென்ற 2012ம் ஆண்டில், அச்சு ஊடக துறையின் சந்தை மதிப்பு, 21,200 கோடி ரூபாயாக உள்ளது. இது, வரும் 2017ம் ஆண்டிற்குள், ஆண்டுக்கு சராசரியாக, 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33,100 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பின் பொது இயக்குனர், சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|