ஊடக துறை சந்தை மதிப்புரூ.2.24 லட்சம் கோடியாக உயரும்ஊடக துறை சந்தை மதிப்புரூ.2.24 லட்சம் கோடியாக உயரும் ... ரூபாயின் மதிப்பில் சரிவு: 63.81 ரூபாயின் மதிப்பில் சரிவு: 63.81 ...
மானிய நிலுவை வழங்க உர நிறுவனங்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2013
01:18

புதுடில்லி : சென்ற 2012-13ம் நிதியாண்டு மார்ச் நிலவரப்படி, நிலுவையில் உள்ள, 30 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை வழங்க வேண்டும் என, உர தயாரிப்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
வங்கி கடன்:இதையடுத்து, உர அமைச்சகம், சிறப்பு வங்கி நடைமுறையின் கீழ், உடனடியாக, 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, மத்திய நிதிஅமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.இந்த நடைமுறையின் கீழ், உர நிறுவனங்கள், அவற்றின் மானிய நிலுவையில் குறிப்பிட்ட தொகையை வங்கியில் கடனாக பெறலாம். கடந்த நிதியாண்டில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மூலம் இத்தகைய வசதி அளிக்கப்பட்டது.
இதனிடையே, உடனடியாக உரமானியம் வழங்கக் கோரி, உர நிறுவனங்களின் சார்பில், டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. மத்திய அரசின் உர மானியத்தில், இறக்குமதி செய்யப்படும் பாஸ்பேட், பொட் டாஷ் ஆகியவற்றுக்கான பங்கீடு அதிக அளவில் உள்ளது.இறக்குமதி செய்யப்படும் யூரியாவிற்கு, 19 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க, போதுமான நிதி உள்ள போதிலும், பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவற்றுக்கு மானியம் கோரும் நிறுவனங்களுக்கு வழங்க, கடந்த ஆகஸ்ட் முதல் போதுமான நிதி இல்லை. எனவே, இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, உர அமைச்சகம், கடிதத்தில் தெரிவித்து உள்ளது.
வட்டி சுமை:சென்ற ஜூன் இறுதி நிலவரப்படி, டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு, 1,150 கோடி ரூபாய் உர மானியம் பாக்கி உள்ளது.நடப்பு செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி, இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்திற்கு, 3,500 கோடி மானியம் நிலுவையில் உள்ளது.
உர நிறுவனங்களுக்கு, ஒரு டன் யூரியா உற்பத்தி செய்ய, 11 ஆயிரம் முதல், 16 ஆயிரம் ரூபாய் வரை செலவா கிறது. இதில் மானிய உதவியாக, 6,000 முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனங்கள் பெறுகின்றன.உரிய காலத்தில், மானியம் வழங்காததால், நடைமுறை செலவினங்களுக்கான கடன் மற்றும் வட்டிச் சுமை அதிகரித்துள் ளதாக, உர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)