பதிவு செய்த நாள்
13 செப்2013
01:18
புதுடில்லி : சென்ற 2012-13ம் நிதியாண்டு மார்ச் நிலவரப்படி, நிலுவையில் உள்ள, 30 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை வழங்க வேண்டும் என, உர தயாரிப்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
வங்கி கடன்:இதையடுத்து, உர அமைச்சகம், சிறப்பு வங்கி நடைமுறையின் கீழ், உடனடியாக, 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, மத்திய நிதிஅமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.இந்த நடைமுறையின் கீழ், உர நிறுவனங்கள், அவற்றின் மானிய நிலுவையில் குறிப்பிட்ட தொகையை வங்கியில் கடனாக பெறலாம். கடந்த நிதியாண்டில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மூலம் இத்தகைய வசதி அளிக்கப்பட்டது.
இதனிடையே, உடனடியாக உரமானியம் வழங்கக் கோரி, உர நிறுவனங்களின் சார்பில், டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. மத்திய அரசின் உர மானியத்தில், இறக்குமதி செய்யப்படும் பாஸ்பேட், பொட் டாஷ் ஆகியவற்றுக்கான பங்கீடு அதிக அளவில் உள்ளது.இறக்குமதி செய்யப்படும் யூரியாவிற்கு, 19 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க, போதுமான நிதி உள்ள போதிலும், பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவற்றுக்கு மானியம் கோரும் நிறுவனங்களுக்கு வழங்க, கடந்த ஆகஸ்ட் முதல் போதுமான நிதி இல்லை. எனவே, இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, உர அமைச்சகம், கடிதத்தில் தெரிவித்து உள்ளது.
வட்டி சுமை:சென்ற ஜூன் இறுதி நிலவரப்படி, டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு, 1,150 கோடி ரூபாய் உர மானியம் பாக்கி உள்ளது.நடப்பு செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி, இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்திற்கு, 3,500 கோடி மானியம் நிலுவையில் உள்ளது.
உர நிறுவனங்களுக்கு, ஒரு டன் யூரியா உற்பத்தி செய்ய, 11 ஆயிரம் முதல், 16 ஆயிரம் ரூபாய் வரை செலவா கிறது. இதில் மானிய உதவியாக, 6,000 முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனங்கள் பெறுகின்றன.உரிய காலத்தில், மானியம் வழங்காததால், நடைமுறை செலவினங்களுக்கான கடன் மற்றும் வட்டிச் சுமை அதிகரித்துள் ளதாக, உர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|