பதிவு செய்த நாள்
13 செப்2013
01:19
மும்பை : நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்வற்றால், "சென்செக்ஸ்' 1.08 சதவீதம் சரிவுடனும், "நிப்டி', 1.06 சதவீதம் சரிவுடனும் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நேற்றைய வர்த்தகத்தில், உலோகம்,வங்கி, நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம் உள்ளிட்ட, பல துறைக ளைச் சேர்ந்த நிறுவனப்பங்குகள்,குறைந்த விலைக்கு கைமாறின.இருப்பினும்,ரியல் எஸ்டேட் மற்றும் நுகர் பொருட்கள் துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 215.57 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,781. 88 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,அதிக பட்ச மாக, 20,052.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,676.49 புள்ளிகள் வரையிலும் சென்றது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 62.45 புள்ளிகள் குறைந்து, 5,850.70 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,932 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,815.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|