மானிய நிலுவை வழங்க உர நிறுவனங்கள் கோரிக்கைமானிய நிலுவை வழங்க உர நிறுவனங்கள் கோரிக்கை ... ரூபாயின் மதிப்பில் சரிவு: 63.81 ரூபாயின் மதிப்பில் சரிவு: 63.81 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அனுமதியின்றி டெபாசிட் திரட்டும்நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2013
01:20

மும்பை : ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, பொதுமக்களிடம் இருந்து, டெபாசிட்டுகளை திரட்டும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் (வங்கி சாரா பணி மேற்பார்வை) அர்ச்சனா மங்களகிரி கூறியதாவது:
நாட்டில், 96 நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல், பொதுமக்களிடம் டெபாசிட் திரட்டி வருவது, தெரியவந்துள்ளது. அவை முறையாக, ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்து கொள்ள கொடுத்த அவகாசம் முடிந்து விட்டது. இதுவரை, மிதமான போக்கை கடைபிடித்து வந்த ரிசர்வ் வங்கி, இனி, இத்தகைய நிறுவனங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியிடம், 12,230 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. சிறிய நிதி நிறுவனங்களையும் கண்காணிக்க, ரிசர்வ் வங்கியிடம் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால், முக்கியமான, 236 நிறுவனங்கள் டெபாசிட் திரட்டுவது குறித்து தான், ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடு குறித்து, டெபாசிட்தாரர்கள் புகார் அளித்தால், ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்.
சட்டபூர்வமற்ற வகையில், திரட்டப்படும் டெபாசிட்டுகள், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, சம்பந்தப்பட்ட நிதி நிறுவன நிறுவனர்களின் துணை நிறுவனங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன.தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளது, தெரியவந்துள்ளது. இது நாள் வரை, மெத்தன போக்கை கடைபிடித்து வந்த ரிசர்வ் வங்கி, இனி, இது போன்ற செயல்பாடுகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)