பதிவு செய்த நாள்
13 செப்2013
01:20
மும்பை : ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, பொதுமக்களிடம் இருந்து, டெபாசிட்டுகளை திரட்டும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் (வங்கி சாரா பணி மேற்பார்வை) அர்ச்சனா மங்களகிரி கூறியதாவது:
நாட்டில், 96 நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல், பொதுமக்களிடம் டெபாசிட் திரட்டி வருவது, தெரியவந்துள்ளது. அவை முறையாக, ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்து கொள்ள கொடுத்த அவகாசம் முடிந்து விட்டது. இதுவரை, மிதமான போக்கை கடைபிடித்து வந்த ரிசர்வ் வங்கி, இனி, இத்தகைய நிறுவனங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியிடம், 12,230 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. சிறிய நிதி நிறுவனங்களையும் கண்காணிக்க, ரிசர்வ் வங்கியிடம் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால், முக்கியமான, 236 நிறுவனங்கள் டெபாசிட் திரட்டுவது குறித்து தான், ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடு குறித்து, டெபாசிட்தாரர்கள் புகார் அளித்தால், ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்.
சட்டபூர்வமற்ற வகையில், திரட்டப்படும் டெபாசிட்டுகள், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, சம்பந்தப்பட்ட நிதி நிறுவன நிறுவனர்களின் துணை நிறுவனங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன.தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளது, தெரியவந்துள்ளது. இது நாள் வரை, மெத்தன போக்கை கடைபிடித்து வந்த ரிசர்வ் வங்கி, இனி, இது போன்ற செயல்பாடுகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|