பதிவு செய்த நாள்
14 செப்2013
00:34
புதுடில்லி:இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், கறிக்கோழி உற்பத்தி, 60 லட்சம் டன்னை எட்டும் என, "அசோசெம்' அமைப்பு தெரிவித்து உள்ளது.
தற்போது, உள்நாட்டில், கறிக்கோழி உற்பத்தி, 35 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இது, ஆண்டுக்கு சராசரியாக, 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, வரும் 2015ம் ஆண்டிற்குள், 60 லட்சம் டன்னை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள் ளது.மக்கள் தொகை, வேகமாக அதிகரித்து வருவதாலும், நடுத்தர குடும்பங்களின், தனிநபர் வருமானம் உயர்ந்து வருவதையடுத்தும், உள்நாட்டில், கறிக்கோழிகளுக்கான தேவை, 15 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து வருகிறது.
நாட்டின், பல பாகங்களில், அவ்வப்போது, பறவை காய்ச்சல் பீதி எழும்போதிலும், கறிக்கோழிக்கான தேவை அதி கரித்து வருகிறது. அதே சமயம், கறிக்கோழியின் தனி நபர் பயன்பாடு, ஆண்டுக்கு, 3 கிலோவுக்கும் குறை வாகவே உள்ளது என, "அசோசெம்' மேலும் தெரிவித்துள்ளது.ஒட்டு மொத்த கறிக்கோழி உற்பத்தியில், தென் மாநிலங்களின் பங்களிப்பு, 45 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
குறிப்பாக, நாட்டின் ஒட்டு மொத்த கறிக்கோழி உற்பத்தியில், ஆந்திராவின் பங்களிப்பு மட்டும், 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.தற்போதைய நிலையில், இந்தியாவில், கறிக்கோழி விற்பனை துறை யின் சந்தை மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இருப்பினும், போதிய அளவிற்கு நிதி, சந்தைப்படுத்தும் வசதிகள் இல்லாதது, பதப்படுத்தல் மற்றும் சேமிப்பு கிடங்கு பற்றாக்குறை, தீவன பொருட்களின் விலைஉயர்வு போன்றவை, இத்துறையின் வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளது.வங்கதேசம்,ஓமன்,சவுதி அரேபியா மற்றும் ஐக்கியஅரபு நாடுகள் ஆகியவை,இந்திய கறிக்கோழி ஏற்றுமதிக்கு முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|