பதிவு செய்த நாள்
16 செப்2013
10:22
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 289.66 புள்ளிகள் அதிகரித்து 20022.42 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 74.90 புள்ளிகள் அதிகரித்து 5925.50 புள்ளிகளோடு காணப்பட்டது. வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.62.80 ஆக இருந்தது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சற்று சரிவுடன் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைக ளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|