தங்கம் விலை ரூ.392 குறைந்ததுதங்கம் விலை ரூ.392 குறைந்தது ... தங்க நகை மீதான இறக்குமதி வரியை மேலும் உயர்த்த திட்டம் தங்க நகை மீதான இறக்குமதி வரியை மேலும் உயர்த்த திட்டம் ...
ரூபாய் மதிப்பு சரிவால் நுகர்பொருட்களின் விலை உயருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2013
14:09

டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்ததை தொடர்ந்து, நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சோப்பு, சலவைத் தூள், பற்பசை, அழகு சாதன பொருட்கள் போன்றவற்றின் விலையை, உயர்த்தி வருகின்றன.

இந்துஸ்தான் யூனிலிவர்

குறிப்பாக, நுகர்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், இந்துஸ்தான் யூனிலிவர், கோல்கேட், ஜி.எஸ்.கே. கன்ஸ்யூமர் போன்ற நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை, 2 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நுகர் பொருட்கள் துறையில், முன்னணியில் உள்ள, இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களில், இரண்டாவது முறையாக, விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனம், கடந்த, ஜூலை மாதத்தில், டோவ் மற்றும் லேக்மி ஆகியவற்றின் விலையை, 7 சதவீத அளவிற்கு உயர்த்தியது.

பாதிப்பு

இதுகுறித்து, எடில் வைஸ் நிறுவனத்தின் துணை இயக்குனர் (ஆராய்ச்சி) அபினேஷ் ராய் கூறியதாவது: டாலருக்கு எதிரான, ரூபாய் மதிப்பு சரிவடைந்ததை தொடர்ந்து, நுகர் பொருட்கள் துறை லாப வரம்பு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதை ஈடுகட்டும் வகையில், இத்துறை நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன. நடப்பாண்டில், ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு, 20 சதவீதம் சரிவடைந்தது. குறிப்பாக, கடந்த மாத இறுதியில், ரூபாயின் மதிப்பு, 68க்கும் மேல் வீழ்ச்சி கண்டது. இது, தற்போது, 63 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

பாமாயில்

நுகர் பொருட்கள் பிரிவில், சோப்பு தயாரிப்பிற்கு முக்கிய மூலப் பொருளான, பாமாயிலின் விலை, ரூபாய் மதிப்பின் சரிவால் அதிகரித்து உள்ளது. அதேசமயம், டிடர் ஜென்ட் தயாரிப்பிற்கு உதவும், சலவை சோடா சாம்பல் ஆகியவற்றின் விலை, உயரவில்லை என்றாலும், ரூபாய் மதிப்பின் சரிவால், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. கடந்த, ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ஒரு சில மூலப் பொருட்களின் விலை, குறைந்ததையடுத்து, இத்துறை நிறுவனங்கள், சோப்பு மற்றும் டிடர்ஜென்ட்டுகளுக்கு சலுகை திட்டங்களை அறிவித்தன. ஆனால், தற்போது, மூலப் பொருட்களின் விலை உயர்ந்ததையடுத்து, இந்நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்த துவங்கியுள்ளன. இவ்வாறு அபினேஷ் தெரிவித்தார்.

இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தை தொடர்ந்து, கோத்ரெஜ் கன்ஸ்யூமர், விப்ரோ மற்றும் ரெக்கிட் பென்கிஸர் ஆகி நிறுவனங்களும், அவற்றின் தயாரிப்புகளின் விலையை உயர்த்த, வாய்ப்புள்ளது என, சந்தையாளர்கள் தெரிவித்தனர். இமாமி நிறுவனம், விலை உயர்வு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. என்றாலும், சந்தை வட்டாரத்தினர், இந்நிறுவனம், அதன் தயாரிப்புகளான, ஜன்டு பாம், போரோ பிளஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தி உள்ளதாக, தெரிவித்தனர்.

கோல்கேட் நிறுவனம்

ஆனால், விலை உயர்வு குறித்து, கருத்து வெளியிட விரும்பவில்லை என, இதன் தலைமை செயல் அதிகாரி (நிதி மற்றும் வர்த்தக மேம்பாடு) நரேஷ் பன்சாலி தெரிவித்தார். கோல்கேட் மற்றும் ஜி.எஸ்.கே., ஆகிய நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளான, கோல்கேட் மேக்ஸ் பிரஷ், கோல்கேட் ஆக்டிவ் சால்ட் மற்றும் சென்சொடைன் ரபிட் ரிலிப் ஆகியவற்றின் விலையை உயர்த்த இருப்பதாக, தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)