ரூபாய் மதிப்பு சரிவால் நுகர்பொருட்களின் விலை உயருகிறதுரூபாய் மதிப்பு சரிவால் நுகர்பொருட்களின் விலை உயருகிறது ... பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு ...
தங்க நகை மீதான இறக்குமதி வரியை மேலும் உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2013
14:10

புதுடில்லி: தங்க நகைகளின், இறக்குமதிக்கு தற்போது, 11.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை, மேலும் உயர்த்த மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.

ரூபாய் மதிப்பின் சரிவு, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளால், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரே ஆண்டில், மூன்று முறை, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, உயர்த்தப்பட்டு உள்ளது. வரி உயர்வால், சென்ற ஆகஸ்ட் மாதம், தங்கம் இறக்குமதி, 65 கோடி டாலராக, சரிவடைந்தது. இது, இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில், 220 கோடி டாலராக இருந்தது. தங்கம் இறக்குமதி குறைந்ததால், ஆபரண உற்பத்தியாளர்கள், நேரடியாக வெளிநாடுகளில் இருந்து, தங்க நகைகளை இறக்குமதி செய்யத் துவங்கி உள்ளனர்.

இது, தங்கம் இறக்குமதியை விட, லாபகரமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், மத்திய அரசு, இரு வாரங்களுக்கு ஒரு முறை, தங்கத்தின் சர்வதேச மதிப்பிற்கேற்ப, அதன் இறக்குமதி மதிப்பை நிர்ணயிக்கிறது. சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை குறைந்து உள்ளதால், தங்க ஆபரணங்கள் இறக்குமதியில், மொத்த வியாபாரிகள் மட்டுமின்றி, சில்லரை வியாபாரிகளும் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து, தங்க ஆபரணங்கள் மீதான, இறக்குமதி வரியை உயர்த்த, மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேலும் பல, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கும், கூடுதல் வரி விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், சென்ற மே மாதம், 2,000 கோடி டாலர் என்ற அளவில் இருந்த, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, ஆகஸ்ட் மாதம், 1,090 கோடி டாலராக குறைந்து உள்ளது. ஏற்றுமதியில், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டதால், இது சாத்தியமாயிற்று. இதே போன்று, சென்ற நிதிஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக இருந்த நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, நடப்பு நிதியாண்டில், 3.7 சதவீதமாக குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகள் மூலம், இது சாத்தியம் ஆக வாய்ப்புள்ளது என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)