இ.பி.எப்.,க்கு வட்டி எவ்வளவு? வாரிய கூட்டத்தில் முடிவுஇ.பி.எப்.,க்கு வட்டி எவ்வளவு? வாரிய கூட்டத்தில் முடிவு ... நாட்டின் ஏற்றுமதி 16 சதவீதம் வளர்ச்சி காணும்: ரூபாய்மதிப்பு மேலும் வலுவடையும் நாட்டின் ஏற்றுமதி 16 சதவீதம் வளர்ச்சி காணும்: ரூபாய்மதிப்பு மேலும் ... ...
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியிலும் இந்தியாவுக்கு பணம் அனுப்புவதில் கேரளத்தவர் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2013
18:35

புதுடில்லி:ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது கவலையளிப்பதாக இருந்தாலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களில், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 75 ஆயிரம் கோடி ரூபாயை, இந்தியாவுக்கு அனுப்பி உள்ளனர். இது ஒரு புதிய சாதனையாகும்.

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த வாரம் வரை, வீழ்ச்சியடைந்து இருந்தது. 70 ரூபாயை எட்டும் அளவுக்கு சென்றது. ரிசர்வ் வங்கியின் புது கவர்னர் வரவுக்கு பின், சில மாற்றங்கள் காரணமாக, ரூபாய் மதிப்பு சற்றே கூடி வருகிறது.இந்த சூழ்நிலையிலும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவுக்கு பணம் அனுப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக, வெளிநாட்டில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், அபரிமிதமாக பணத்தை அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக, மாநில அளவிலான வங்கிகள் கமிட்டி அளித்துள்ள புள்ளி விவரம்:கடந்த, 2012ல், ஜூன் மாதம் வரையிலான, ஆறு மாத காலத்தில், வெளிநாட்டில் உள்ள கேரள மாநிலத்தவர்கள், தங்கள் மாநிலத்திலுள்ள வங்கிகளில் முதலீடு செய்த தொகை, 55,700 கோடி ரூபாய். ஆனால், இந்த ஆண்டில், ஜூன் வரையிலான காலத்தில், 75,900 கோடி ரூபாய்க்கு பணம் அனுப்பியுள்ளனர். இது, முந்தைய ஆண்டை விட, 32.8 சதவீதம் அதிகம்.

கேரளாவைச் சேர்ந்த, 25 லட்சம் பேர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இதில், 40 சதவீதத்தினர், ஐக்கிய அரபு நாடுகளிலும், 25 சதவீதத்தினர் சவுதி அரேபியாவிலும் வசிக்கின்றனர். இவர்கள், கேரள மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 35 சதவீத பங்களிப்பை அளிக்கின்றனர்.

இந்தாண்டு ஜூன் மாதம் வரை, கேரளாவில் உள்ள வங்கிகளில், மொத்தம் டிபாசிட் தொகை, 2.39 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த, 2012ம் ஆண்டு, மே மாத நிலவரப்படி, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 2.20 கோடி.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)