பதிவு செய்த நாள்
17 செப்2013
00:28
புதுடில்லி: நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம், 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில், 5.79 சதவீதமாக குறைந்து காணப்பட்டது என, மத்திய அர” வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெங்காயம்:மதிப்பீட்டு மாதத்தில், வெங்காயத்தின் விலை, ஆண்டுக் கணக்கில், 245 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், காய்கறிகளின் விலையும், 77.81 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது தவிர, அரிசி, தானியங்கள், முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றின் விலையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து உள்ளது.இருப்பினும், கணக்கீட்டு மாதத்தில், உருளைக்கிழங்கின் விலை, ஆண்டுக் கணக்கில், 15 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை, 14 சதவீதமும் சரிவடைந்துள்ளது. மேலும், சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய்விலை முறையே, 4.2 சதவீதம் மற்றும் 3.86 சதவீதம் குறைந்துள்ளது.ஒட்டு மொத்த அளவில், தயாரிப்பு பொருட்களின் விலை, 1.9 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.பணவீக்க உயர்வு குறித்து, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் கூறியதாவது:டாலருக்கு எதிரான ரூபாய்வெளி மதிப்பு சரிவின் காரணமாக, ஆகஸ்ட் மாதத்தில், பணவீக்கம் அதிகரித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில், பருவ மழை நன்கு உள்ளதால், வரும் மாதங்களில், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் குறையத் துவங்கும். இது, மேலும் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.ரிசர்வ் வங்கி:நடப்பு நிதியாண்டின் இறுதியில், பணவீக்கம், 5.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 20ம் தேதி வெளியிட உள்ள, அதன் நிதி ஆய்வு கொள்கையில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பது கடினம் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|