ரூ.20,200 கோடியில் என்.டி.பி.சி., நிறுவனம் விரிவாக்கம்ரூ.20,200 கோடியில் என்.டி.பி.சி., நிறுவனம் விரிவாக்கம் ... சிமென்ட் மூட்டை விலை ரூ.400 ஆக உயர்கிறது சிமென்ட் மூட்டை விலை ரூ.400 ஆக உயர்கிறது ...
தங்க நகை மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2013
00:24

புதுடில்லி:மத்திய நிதியமைச்சகம், இறக்குமதி செய்யப்படும் தங்க நகை மீதான ”ங்க வரியை, 10 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை :ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததால், நாட்டின் வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது. குறிப்பாக, கடந்த 2012-13ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதமாக அதிகரித்தது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவிற்கும் இது முக்கிய காரணமாகும். நடப்பு கணக்கு பற்றாக்குறையை, கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அர”ம், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இதையடுத்து, நடப்பு 2013ம் ஆண்டில், இதுவரையிலுமாக, தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை, மத்திய அரசு, மூன்று முறை உயர்த்தியது. தற்போது, தங்கம் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஜூலை மாதத்தில், ஒட்டு மொத்த தங்கம் இறக்குமதி, 290 கோடி டாலராக இருந்தது. இதில், தங்க நகைகளின் இறக்குமதி மதிப்பு, 13.76 கோடி டாலராக இருந்தது. நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 162 டன் னாக மிகவும் அதிகரித்திருந்தது. இதை குறைக்கும் வகையிலேயே, மத்திய அரசு, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தாய்லாந்து : இந்நிலையில், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து, குறைந்த விலையில், தங்க நகைகள் இறக்குமதி செய்யப் படுகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது, தங்க நகைகள் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)