தங்க நகை மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிப்புதங்க நகை மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ... தங்க நகை அடமான கடனுக்கு மேலும் கட்டுப்பாடு:ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை தங்க நகை அடமான கடனுக்கு மேலும் கட்டுப்பாடு:ரிசர்வ் வங்கி அதிரடி ... ...
சிமென்ட் மூட்டை விலை ரூ.400 ஆக உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2013
00:26

காரைக்குடி:தமிழகத்தில்,ஆலைகளின் செயற்கை தட்டுப்பாட்டால்,சிமென்ட் விலை மூட்டைக்கு,100 ரூபாய் அதிகரித்து, 400 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.தமிழகத்தில், தினமும், 200 டன்கள் வரை சிமென்ட் உற்பத்தியாகிறது. தற்போது, தமிழகத்தில் கட்டுமான துறை வளர்ச்சி பெற்று, பல அடுக்கு மாடி கட்டடங்கள், வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
முகவர்கள்:இதன் காரணமாக, கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.கடந்த ஓராண்டாக, சிமென்ட் மூட்டை, 265 ரூபாய் முதல் 310 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த, அக்டோபர் மாதம், சிமென்ட் மூட்டை, 390 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வரும் செப்.,19 முதல், மூட்டையை, 400 ரூபாய்க்கு விற்குமாறு விற்பனை முகவர்களை, ஆலைகள் வலியுறுத்தி வருகின் றன. டீசல் விலை உயர்வு, தீபாவளிக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை, ஈடுகட்ட சிமென்ட் ஆலை நிர்வாகங்கள், விலை உயர்வை கையாளுகின்றன.ஆலைகள் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சிமென்ட் விலையை உயர்த்தி வருவதாக, கட்டுமான பொறியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தட்டுப்பாடு:செட்டிநாடு, அகில இந்திய கட்டுனர் (பில்டர்ஸ்) சங்க முன்னாள் தலைவர் பெரியகருப்பன் கூறுகையில், ""கடந்த செப்.,15 முதல், சிமென்ட் சப்ளையை நிறுத்தி, செயற்கை தட்டுப் பாட்டை ஏற்படுத்தி உள்ளனர்.செப்.,19 முதல், ஒரு மூட்டையை, 400 ரூபாய்க்கு விற்க திட்டமிட்டு உள்ளனர். சிமென்ட் டீலர்களுக்கும், விலை பட்டியல் வந்து உள்ளது. விலையை குறைக்க கோரி, ஆலை நிர்வாகத்திடம், பேச்சுவார்த்தை நடத்த, முதல்வர் ஜெ.,விடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)