சிமென்ட் மூட்டை விலை ரூ.400 ஆக உயர்கிறது சிமென்ட் மூட்டை விலை ரூ.400 ஆக உயர்கிறது ... ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.63.31 ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.63.31 ...
தங்க நகை அடமான கடனுக்கு மேலும் கட்டுப்பாடு:ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2013
00:30

மும்பை:தங்கத்திற்கான தேவையை கட்டுப்படுத்தும் நோக்கில், நகை கடன்களுக்கான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி மேலும் கடுமையாக்கியுள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது, வங்கி சாரா நிதி நிறுவனங்களில், அடமானம் வைக்கப்படும் நகைகளை மதிப்பீடு செய்வதில், ஒரு நிலையான நடைமுறை எதுவும் பின்பற்றப்படுவது இல்லை.
மதிப்பீடு:அதனால், நகைகளின் மதிப்பு, தன்னிச்சையாக நிர்ணயிக்கப்படுகிறது. அதில், வெளிப்படையான அணுகு முறையும் காணப்படுவதில்லை.இத்தகைய போக்கை தடுக்கும் நோக்கில், அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளை மதிப்பீடு செய்வதில் ஒரு நிலையான நடைமுறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடமானம் வைக்கப்படும் தங்க நகையை, மும்பை தங்கச் சந்தையில், முந்தைய, 30 நாட்கள் வர்த்தகத்தின் முடிவில் காணப்பட்ட, 22 காரட் தங்கத்தின் சராசரி விலையில், மதிப்பிட வேண்டும்.
வங்கி சாரா நிதி நிறுவனம்:தங்க நகையை அடமானமாக பெறும் வங்கி சாரா நிதி நிறுவனம், அவற்றின் சுய முகவரி கொண்ட தாளில், தங்கத்தின் தூய்மை (காரட்டில்)மற்றும் எடை குறித்து,எழுத்துபூர்வமாக, கடனாளிக்கு வழங்க வேண்டும். தங்கத்தின் தூய்மை, 22 காரட்டிற்கும் குறைவாக இருந்தால், அதை, 22 காரட்டாக கணக்கிட்டு, அடமான நகையின் எடையை குறிப்பிட வேண்டும். அதாவது, தங்க நகையின் தரம் குறைவாக இருந்தாலும், அதற்கேற்ற சரியான விகிதத்தில், அதை மதிப்பிட வேண்டும்.தங்க நகைகளின் மதிப்பில், 60 சதவீதம் மட்டுமே, கடன் வழங்க வேண்டும்.
வருமான வரி கணக்கு எண்: தங்க நகைகளை அடமானம் வைத்து, 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை பெறும் கடனாளிகளிடம் கண்டிப்பாக, வருமான வரி கணக்கு எண் (பான் கார்டு) நகலை வாங்க வேண்டும்.ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகை கடனுக்கான தொகையை, காசோலை மூலமாக மட்டுமே கடனாளிக்கு வழங்க வேண்டும்.நகை கடன் நிறுவனங்கள், அவற்றின் அனைத்து கிளைகளிலும், ஒரே மாதிரியான கடன் ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.
2-3 நிமிடங்களில் நகைக் கடன் வழங்குவதாக, தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.1,000 கிளைகளுக்கு மேல் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மேலும், கிளைகளை திறக்க, ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெறவேண்டும்.தங்க நகைகளை வைப்பதற்கான கிடங்கு அல்லது, அடமான நகைகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகள் இல்லாவிட்டால்,புதிய கிளைகள் திறப்பதற்கு, அனுமதி வழங்கப்படமாட்டாது.
கிளைகள்: நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ள கிளைகள் அமைந்துள்ள நகரம் அல்லது தாலுகாவில் தான், மீட்கப்படாத நகைகளை ஏலம் விட வேண்டும்.அடமான நகைகளை ஏலம் விடும்பொழுது,மும்பை தங்கச் சந்தையில், முந்தைய 30 நாட்கள் வர்த்தகத்தின் சராசரி இறுதி விலையில்,85 சதவீதத்திற்கு குறையாமல்,குறைந்தபட்ச கேட்புத் தொகையாக நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)