பதிவு செய்த நாள்
19 செப்2013
00:02
புதுடில்லி:உள்நாட்டிற்குள், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 52.60 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது, கடந்தாண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 17 சதவீதம் அதிகமாகும் என, விமான போக்குவரத்து இயக்குனரகம் (டீ.ஜி.சி.ஏ.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், டில்லியைச் சேர்ந்த இண்டிகோ நிறுவனம், 15.31 லட்சம் பயணிகளை (29.1 சதவீதம்) கையாண்டு, முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஏர்-இந்தியா (10.48 லட்சம் பயணிகள்), ஜெட் ஏர்வேஸ் (9.88 லட்சம்), கோ ஏர் (4.57 லட்சம் பயணிகள்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
கணக்கீட்டு மாதத்தில், கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் உள்ளிட்ட விடுமுறை தினங்கள் வந்ததையடுத்து, விமான பயணிகளின் எண்ணிக்கை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளதாக, டீ.ஜி.சி.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|