பதிவு செய்த நாள்
19 செப்2013
00:22
புதுடில்லி:சென்ற ஜூலை மாதத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 165 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 147 கோடி டாலராக இருந்தது என, தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னி நேரடி முதலீடு, 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 705 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 590 கோடி டாலராக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில்,மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த அன்னிய நேரடி முதலீட்டில், சேவை துறை, 102 கோடிடாலரை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மருந்து (100 கோடி டாலர்), மோட்டார் வாகனம் (63.70 லட்சம் டாலர்), கட்டுமானம் (35.90 லட்சம் டாலர்) ஆகிய துறைகள் உள்ளன.
அன்னியச் செலாவணி வரத்தை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக, தொலை தொடர்பு, தேயிலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட, 12 துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் வகையில், மத்திய அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.இதுவும்,இந்தியாவில்,அன்னிய முதலீடு சிறப்பான அளவில் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 2,242 கோடி டாலர் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 3,650 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|