அன்னிய நேரடி முதலீடு 12 சதவீதம் அதிகரிப்புஅன்னிய நேரடி முதலீடு 12 சதவீதம் அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பில் எழுச்சி - ரூ.61.77 ரூபாயின் மதிப்பில் எழுச்சி - ரூ.61.77 ...
தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.7,307 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2013
00:26

புதுடில்லி:நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, ரூபாய்மதிப்பின் அடிப்படையில், 13.96 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,412 கோடி ரூபாயிலிருந்து, 7,307 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என, மத்திய வர்த்தக ஆய்வு மற்றும் புள்ளியியல் இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாலர் மதிப்பு:கணக்கீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 10.25 சதவீதம் அதிகரித்து, 119 கோடி டாலரிலிருந்து, 131 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததால், வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதம் அல்லது, 8,820 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,3.8 சதவீதம் அல்லது 7,000 கோடி டாலராக குறைக்க, மத்திய நிதி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரித்து உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பதப்படுத்தப்பட்ட தோல் ஏற்றுமதி, கடந்த ஆண்டின், இதே காலாண்டை விட, 8.78 சதவீதம் அதிகரித்து, 1,636 கோடியிலிருந்து, 1,780 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
காலணிகள்:கணக்கீட்டு காலாண்டில்,தோல் காலணிகள் ஏற்றுமதி,9.84 சதவீதம் அதிகரித்து,2,118 கோடியிலிருந்து,2,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே போன்று, காலணிகளுக்கான உதிரி பாகங்கள் ஏற்றுமதி, 32.15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 333 கோடி ரூபாயிலிருந்து, 440 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
தோல் ஆடைகள்:தோல் ஆடைகள் ஏற்றுமதி, 5.94 சதவீதம் உயர்ந்து,614 கோடியிலிருந்து, 650 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இதர தோல் பொருட்கள் ஏற்றுமதி,17.04 சதவீதம் அதிகரித்து, 1,437 கோடியிலிருந்து, 1,682 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விலங்கினங்களுக்கு பயன்படும் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 26.10 சதவீதம் உயர்ந்து, 140 கோடியிலிருந்து, 177 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தோல் பொருட்கள் சாராத காலணிகள் ஏற்றுமதி, 87.89 சதவீதம் வளர்ச்சி கண்டு, 134 கோடியிலிருந்து, 253 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், நடப்பு நிதிஆண்டின் துவக்கத்தில் இருந்து, டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு சரிவடைந்து வருவதும், இத்துறையின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது.
நம்நாட்டிலிருந்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு, தோல் பொருட்கள் ஏற்றுமதி யாகின்றன. மொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில், ஜெர்மன் நாட்டிற்கான ஏற்றுமதி, 12.03 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, இங்கிலாந்து, 11.20 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா, 10.53 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
டென்மார்க் :மேற்கண்ட நாடுகள் தவிர, ஹாங்காங்க் (10.20 சதவீதம்), இத்தாலி, (9.62), பிரான்ஸ் (5.55), ஸ்பெயின் (4.74), நெதர்லாந்து (3.61), சீனா (2.29), டென்மார்க் (1.42), ஐக்கிய அரபு நாடுகள் (3.54) மற்றும் பெல்ஜியம் (1.75 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கும், நம் நாட்டிலிருந்து, அதிகளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆவதாக, மத்திய வர்த்தக ஆய்வு மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)