பதிவு செய்த நாள்
19 செப்2013
10:03
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(செப்., 19ம் தேதி, வியாழக்கிழமை) எழச்சி காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 158 காசுகள் உயர்ந்து ரூ.61.80-ஆக இருந்தது. கடந்த ஒரு மாதங்களுக்கு பிறகு இப்போது தான் அதிகபட்ச உயர்வுடன் துவங்கி இருக்கிறது ரூபாயின் மதிப்பு. தொடர்ந்து மாலை வர்த்தகநேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.61.77-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூ.63.38-ஆக முடிந்து இருந்தது ரூபாயின் மதிப்பு.
அமெரிக்க பெடரல் வங்கி தொடர்ந்து பாண்டு பத்திரங்களை வாங்கும் முடிவில் இருப்பதாக அறிவித்தது, உலகளவில் பிறநாட்டு கரன்சிகளை காட்டிலும் டாலரின் மதிப்பு குறைந்தது போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|