பதிவு செய்த நாள்
19 செப்2013
10:29
மும்பை: வாரத்தின் நான்காவது நாளான இன்று பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது சென்செக்ஸ் 20,000 புள்ளிகளும், நிப்டி 6,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385.14 புள்ளிகள் அதிகரித்து 20347.30 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 144.70 புள்ளிகள் அதிகரித்து 6044.15 புள்ளிகளோடு காணப்பட்டது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதி்ப்பும் உயர்ந்துள்ளது. இன்று வர்த்தகம் துவங்கிய போது ரூபாய் மதிப்பு 61.70 ஆக உள்ளது. நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று நன்கு இருந்தது.சாதகமான சர்வதேச நிலவரங்கள் மற்றும் பல முன்னணி நிறுவனப்பங்குகளின் விலை குறைவாக இருந்ததை சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடவந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|