பதிவு செய்த நாள்
19 செப்2013
15:11
புதுடில்லி : இரண்டு அல்லது மூன்று வாரத்தில் வெங்காயம் விலை குறையும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும் என்றால் இப்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வரத் துவங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாகவே வெங்காயத்தின் விலை அதிவேகமாக உயர்ந்துள்ளது. தற்சமயம் டில்லியில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.80 விற்பனையாகிறது.
சமீபத்தில் வெளிவந்த பணவீக்கம் உயர்வுக்கு முக்கிய காரணமே வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்தது தான். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் வெங்காயத்தின் விலை 245 சதவீதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாக இன்னும் விலை உயரக்கூடும் என்ற கணிப்பில் ஏராளமாக பதுக்கல்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் வெங்காயத்தின் விலை விரைவில் குறையும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடமும் பேசியுள்ளோம், மேலும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இன்னும் இரண்டு-மூன்று வாரத்தில் வெங்காயத்தின் விலை குறையும் என்றார்.
இதே கருத்தை மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸூம் கூறியுள்ளார். அக்டோபர்-நவம்பரில் வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிக்கும் என்பதால் விரைவில் விலை குறையும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமைச்சர் சரத்பவார், ஒரு செய்தி நிறுவனத்துக்கு வெங்காயம் விலை ஏற்றம் தொடர்பான கேள்விக்கு, இது எனது துறை கிடையாது, நுகர்வோர் விவகாரத்துறை தான் இதை கவனிக்கிறது. வெங்காயம் விலை குறைந்தபோது விவசாயிகளிடம் சென்று ஒருவரும் அதை கேட்கவில்லை, இப்போது விலை ஏறிய பின்னர் விவசாயிகள் அதிக லாபம் பெறுகின்றனர். ஆனால் அதை அனைவரும் குற்றமாக பார்க்கின்றனர் என்று கூறியிருந்தார்.
கபில்சிபல் அளித்த பேட்டி ஒன்றில், அரசாங்கம் ஒன்று வெங்காயத்தை விற்பனை செய்யவில்லை, வியாபாரிகள் தான் விற்பனை செய்கிறார்கள், ஏன் இந்த கேள்வியை அவர்களிடம் கேட்க கூடாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|