வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி கார் விலை ரூ.10 ஆயிரம் உயர்கிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 செப்2013
00:49
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், அதன் அனைத்து கார்களின் விலையை, 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு, வரும் அக்டோபர் முதல் வாரம், அமலுக்கு வரும் என, தெரிகிறது
.
கடந்த மே மாதம் முதல் நடப்பு செப்டம்பர் வரை, ரூபாய் மதிப்பு, 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.ரூபாய் மதிப்பின் சரிவால், வாகன தயாரிப்பிற்கான மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மாருதி சுசூகி நிறுவனம், அதன் கார்களின் விலையை உயர்த்த உள்ளது. நடப் பாண்டு, தொடர்ந்து பல மாதங்களாக வாகனத் துறையின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சி குறைந்து வந்தது. இந்த நிலையில், சென்ற ஆகஸ்ட் மாதம் வாகனத் துறை சற்று வளர்ச்சி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 26,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 26,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 26,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 26,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 26,2013
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!