பதிவு செய்த நாள்
26 செப்2013
00:53
புதுடில்லி:நடப்பு 2013 – 14ம் நிதியாண்டில், மத்திய அரசின் உர மானியச் செலவினம்,65 ஆயிரம் கோடி முதல், 70 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் இருக்கும் என, தரக்குறியீட்டு நிறுவனமான, இக்ரா தெரிவித்து உள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான, பட்ஜெட் அறிவிப்பின் போது, உர மானியச் செலவினம்,66 ஆயிரம்கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. முந்தைய ஆண்டிற்கு,36 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் நிலுவையில் உள்ளது.
உரிய காலத்தில், மானியத் தொகை வழங்கப்படாத நிலையில், நடப்பு நிதியாண்டிலும், நிலுவை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உர மானிய தொகை வழங்கப்படாத நிலையில், அது இத்துறை நிறுவனங் களின், வருவாயையும், லாப வரம்பையும் பாதிப்படையச் செய்யும்.
நடப்பு ஆண்டில், பருவமழை பொழிவு நன்கு உள்ளதால், நாட்டின் வேளாண் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உரத்துக்கான தேவை அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில், பாஸ்பேட், பொட்டாஷ் மற்றும் டை அம்மோ னியம் பாஸ்பேட் ஆகிய உர வகைகளுக்கான மானியச் செலவு, 29 ஆயிரம் முதல்,30 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் நிலையாக இருக்கும்.
யூரியா உரத்திற்கான மானியச் செலவினம், 36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும். சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை குறைந்துள்ளது என்றாலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவால், அதற்கான பலன் கிடைக்காமல் போய்விடும் என, இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|