ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ... பருத்தி ஏற்றுமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு பருத்தி ஏற்றுமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு ...
நாட்டின் உர மானிய செலவினம் ரூ.70 ஆயிரம் கோடியாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2013
00:53

புதுடில்லி:நடப்பு 2013 – 14ம் நிதியாண்டில், மத்திய அரசின் உர மானியச் செலவினம்,65 ஆயிரம் கோடி முதல், 70 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் இருக்கும் என, தரக்குறியீட்டு நிறுவனமான, இக்ரா தெரிவித்து உள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான, பட்ஜெட் அறிவிப்பின் போது, உர மானியச் செலவினம்,66 ஆயிரம்கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. முந்தைய ஆண்டிற்கு,36 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் நிலுவையில் உள்ளது.
உரிய காலத்தில், மானியத் தொகை வழங்கப்படாத நிலையில், நடப்பு நிதியாண்டிலும், நிலுவை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உர மானிய தொகை வழங்கப்படாத நிலையில், அது இத்துறை நிறுவனங் களின், வருவாயையும், லாப வரம்பையும் பாதிப்படையச் செய்யும்.
நடப்பு ஆண்டில், பருவமழை பொழிவு நன்கு உள்ளதால், நாட்டின் வேளாண் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உரத்துக்கான தேவை அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில், பாஸ்பேட், பொட்டாஷ் மற்றும் டை அம்மோ னியம் பாஸ்பேட் ஆகிய உர வகைகளுக்கான மானியச் செலவு, 29 ஆயிரம் முதல்,30 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் நிலையாக இருக்கும்.
யூரியா உரத்திற்கான மானியச் செலவினம், 36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும். சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை குறைந்துள்ளது என்றாலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவால், அதற்கான பலன் கிடைக்காமல் போய்விடும் என, இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)