நாட்டின் உர மானிய செலவினம் ரூ.70 ஆயிரம் கோடியாக உயரும்நாட்டின் உர மானிய செலவினம் ரூ.70 ஆயிரம் கோடியாக உயரும் ... மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளால்..நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.80,242 கோடியாக சரிவு மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளால்..நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி ... ...
பருத்தி ஏற்றுமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2013
00:55

திருப்பூர்:70 லட்சம் பொதிகளுக்கு (1 பொதி–170 கிலோ) அதிகமாக பருத்தி ஏற்றுமதி செய்தால்,அதற்கு 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சாம்பசிவராவ் தெரி வித்தார்.
நூற்பாலைகள்:திருப்பூர் பின்னலாடை ஜவுளித் துறையினருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பின்னர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது:நடப்பாண்டு, 370 லட்சம் பருத்தி பொதிகள் உற்பத்தியாகும் என கணக்கிடப் பட்டுள் ளது. நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகளுக்கு, 280 லட்சம் பொதிகள் தேவைப்படும் என, மதிப்பிடப் பட்டுள் ளது.
ஏற்றுமதிக்கு,70 லட்சம் பருத்தி பொதிகள் போக,உபரியாக,19 லட்சத்திற்கும் மேற்பட்ட பருத்தி பொதிகள் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.உள்நாட்டில் பருத்தி விலை சீராக இருக்க, 70 லட்சம் பருத்தி பொதிகளுக்கு மேல் செய்யப்படும் ஏற்றுமதிக்கு, 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால், பருத்தி நூலிழை விலையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தற்போது ஹெக்டேருக்கு, 550 கிலோ பருத்தி உற்பத்தியாகிறது. பருத்தி உற்பத்தி குறித்த ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதன் மூலம், இந்த உற்பத்தி நான்கு மடங்கு உயர்ந்து, பருத்திக்கான தேவை பூர்த்தியாகிவிடும்.
ஐந்தாண்டு திட்டம்:தொழில்துறை மேம்பாட்டுக்காக, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், டப் திட்டத்தின் கீழ், 904 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்நிதியை பயன்படுத்தி,தொழில் துறையினர் தங்கள் நிறுவ னங்களை மேம்படுத்தி, ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, சாம்பசிவ ராவ் கூறினார்.
ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறுகையில், “நூற்பாலைகள், பருத்தி நூலிழை விலையை உயர்த்துவதால், திருப் பூர் பின்னலாடை துறை மட்டுமின்றி,அதை சார்ந்துள்ள தொழில்களும் பாதிக்கப்படுகின்றன.இந்திய பருத்திக் கழகம், கொள்முதல் செய்யும் பருத்தியை, இடைத்தரகர்களுக்கு வழங்காமல், தொழில் துறையினருக்கு மட்டுமே விற்க வேண்டும்” என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)