பதிவு செய்த நாள்
26 செப்2013
01:00
புதுடில்லி:அரசின் கைவசம், மிக அதிகளவில் உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளது. இந்நிலையிலும், பல்வேறு உணவு தானியங்களின் விலை, அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மொத்த விலை குறி யீட்டுஎண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம், 6.1 சதவீதமாகவும், உணவுப் பொருட் களுக்கான பணவீக்கம், 18.18 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வால்தான், ஒட்டு மொத்த அளவில், பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, இது குறித்து, அரசு, ஆய்வு செய்து வருவதாக,மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார். இந்திய மாவு அரவை ஆலையாளர்கள் கூட்டமைப்பின் 73வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
கடந்த ஒரு சில ஆண்டுகளாக, நாட்டின் வேளாண் உற்பத்தி சிறப்பாக இருப்பதுடன், அரசிடம், போதிய அளவிற்கு உணவு தானியங்களும் கையிருப்பில் உள்ளது. இச் சூழ்நிலையில், உணவு பொருட்களின் விலை உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி ஆண்டு தோறும், தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படு கிறது. என்றாலும்,வெளிச் சந்தையில்,உணவு தானியங்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது.செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி, இந்திய உணவு கழகத்தின் கைவசம்,5.89 கோடிடன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதில், 3.83 கோடி டன் கோதுமையும், 2.05 கோடி டன் அரிசியும் கையிருப்பில் உள்ளன.
கடந்த ஆண்டு நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, 25.54 கோடி டன்னாக இருந்தது. இதில், கோதுமை உற்பத்தி, 9.25 கோடி டன்னாகும்.நடப்பாண்டு நாட்டின் பல மாநிலங்களில் பருவமழை நன்கு உள்ளதால், உணவு தானிய உற்பத்தி புதிய சாதனை படைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயிகளின் நலன் கருதி ஆண்டுதோறும், தானிய கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப் படுகிறது. என்றாலும், வெளிச் சந்தையில், உணவு தானியங்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|