பருத்தி ஏற்றுமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவுபருத்தி ஏற்றுமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு ... மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளால்..நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.80,242 கோடியாக சரிவு மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளால்..நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உணவு தானியங்கள் விலை உயரும் மர்மம் மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2013
01:00

புதுடில்லி:அரசின் கைவசம், மிக அதிகளவில் உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளது. இந்நிலையிலும், பல்வேறு உணவு தானியங்களின் விலை, அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மொத்த விலை குறி யீட்டுஎண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம், 6.1 சதவீதமாகவும், உணவுப் பொருட் களுக்கான பணவீக்கம், 18.18 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வால்தான், ஒட்டு மொத்த அளவில், பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, இது குறித்து, அரசு, ஆய்வு செய்து வருவதாக,மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார். இந்திய மாவு அரவை ஆலையாளர்கள் கூட்டமைப்பின் 73வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
கடந்த ஒரு சில ஆண்டுகளாக, நாட்டின் வேளாண் உற்பத்தி சிறப்பாக இருப்பதுடன், அரசிடம், போதிய அளவிற்கு உணவு தானியங்களும் கையிருப்பில் உள்ளது. இச் சூழ்நிலையில், உணவு பொருட்களின் விலை உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி ஆண்டு தோறும், தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படு கிறது. என்றாலும்,வெளிச் சந்தையில்,உணவு தானியங்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது.செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி, இந்திய உணவு கழகத்தின் கைவசம்,5.89 கோடிடன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதில், 3.83 கோடி டன் கோதுமையும், 2.05 கோடி டன் அரிசியும் கையிருப்பில் உள்ளன.
கடந்த ஆண்டு நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, 25.54 கோடி டன்னாக இருந்தது. இதில், கோதுமை உற்பத்தி, 9.25 கோடி டன்னாகும்.நடப்பாண்டு நாட்டின் பல மாநிலங்களில் பருவமழை நன்கு உள்ளதால், உணவு தானிய உற்பத்தி புதிய சாதனை படைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயிகளின் நலன் கருதி ஆண்டுதோறும், தானிய கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப் படுகிறது. என்றாலும், வெளிச் சந்தையில், உணவு தானியங்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)