பதிவு செய்த நாள்
26 செப்2013
01:03
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், நேற்றும், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் நடப்பு மாதத்திற்கான முன்பேர ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைய உள்ளது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வியா பாரத்தில், எண்ணெய், எரிவாயு, வங்கி, நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், பொறியியல், மின்சாரம், உலோகம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 63.97 புள்ளிகள் சரிவடைந்து, 19,856.24 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,978.49 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,658.74 புள்ளிகள் வரையிலும் சென்றது.சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ், எச்.டீ.எப்.சி. பேங்க், மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பீ.எச். இ.எல்., ஹிண்டால்கோ, சேசகோவா உள்ளிட்ட, 15 நிறு வனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், நிப்டி, 18.60 புள்ளி கள் குறைந்து, 5,873.85 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|