பதிவு செய்த நாள்
27 செப்2013
01:24
புதுடில்லி:கடந்த 2012–13ம் நிதியாண்டில், உள்நாட்டில் பட்டாணி உற்பத்தி, 39.42 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, இதற்கு முந்தைய, 2011–12ம் நிதியாண்டில், 37.45 லட்சம் டன்னாக இருந்தது என, தேசிய தோட்டக்கலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007–08ம் நிதியாண்டிலிருந்து, பட்டாணி உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது. அவ்வாண்டில், 25.60 லட்சம் டன்னாக இருந்த இதன் உற்பத்தி, 2008–2009ம் நிதியாண்டில், 29.16 லட்சம் டன்னாகவும், 2009–10ல், 30.29 லட்சம் டன்னாகவும், 2010–11ல், 35.17 லட்சம் டன்னாகவும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் பட்டாணி உற்பத்தியில், உத்தர பிரதேச மாநிலம், 18.05 லட்சம் டன்னுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மத்திய பிரதேசம், 4.97 லட்சம் டன்னுடன் இரண்டாவது இடத்திலும், ஜார்க்கண்ட், 3.58 லட்சம் டன்னுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இம்மாநிலங்களை அடுத்து, இமாச்சல பிரதேசம் (2.58 லட்சம் டன்), பஞ்சாப் (2.02 லட்சம் டன்), மேற்கு வங்கம் (1.32 லட்சம் டன்), அரியானா (1.06 லட்சம் டன்), ஆந்திரா (1 லட்சம் டன்), பீகார் (88 ஆயிரம் டன்), உத்தரகாண்ட் (78 ஆயிரம் டன்) ஆகிய மாநிலங்கள் பட்டாணி உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|