பதிவு செய்த நாள்
28 செப்2013
02:27
புதுடில்லி:மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், பயணிகள் கார் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை, 2 சதவீதம் வரை உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு, அக்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (மோட்டார் வாகனம்) பிரவின் ஷா தெரிவித்தார்.
இறக்குமதி செலவினம்:டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதை யடுத்து, மூலப் பொருட்களுக்கான இறக்குமதி செலவினம், பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இதுநாள் வரை, விலையை உயர்த்தாமல் இருந்தோம். அது, நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிப்பதாக உள்ளது. எனவே, விலை உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது என, பிரவின் ஷா குறிப்பிட்டார்.
வாகனங்களின் மாடல்களை பொறுத்து, இந்த விலை உயர்வு, 6,000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த வாரம், மாருதி சுசூகி நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்தது.ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும், வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ்,டொயோட்டா ,கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், அதன் முக்கிய வாகனங்களின் விலையை, மாடலுக்கு ஏற்ப, 24 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதே போன்று, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், கடந்த, செப்., 1ம் தேதி முதல், இந்தியாவில், அதன் வாகனங்களின் விலையை, 4.5 சதவீத அளவிற்கு உயர்த்தியது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|