பற்றாக்குறையால் பழைய தங்கத்தை நாடும் ஆபரண தயாரிப்பாளர்கள்பற்றாக்குறையால் பழைய தங்கத்தை நாடும் ஆபரண தயாரிப்பாளர்கள் ... தங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.416 அதிகரிப்பு தங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.416 அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனங்களின் விலையை மகிந்திரா உயர்த்துகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2013
02:27

புதுடில்லி:மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், பயணிகள் கார் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை, 2 சதவீதம் வரை உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு, அக்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (மோட்டார் வாகனம்) பிரவின் ஷா தெரிவித்தார்.
இறக்குமதி செலவினம்:டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதை யடுத்து, மூலப் பொருட்களுக்கான இறக்குமதி செலவினம், பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இதுநாள் வரை, விலையை உயர்த்தாமல் இருந்தோம். அது, நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிப்பதாக உள்ளது. எனவே, விலை உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது என, பிரவின் ஷா குறிப்பிட்டார்.
வாகனங்களின் மாடல்களை பொறுத்து, இந்த விலை உயர்வு, 6,000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த வாரம், மாருதி சுசூகி நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்தது.ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும், வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ்,டொயோட்டா ,கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், அதன் முக்கிய வாகனங்களின் விலையை, மாடலுக்கு ஏற்ப, 24 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதே போன்று, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், கடந்த, செப்., 1ம் தேதி முதல், இந்தியாவில், அதன் வாகனங்களின் விலையை, 4.5 சதவீத அளவிற்கு உயர்த்தியது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)