தங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.416 அதிகரிப்புதங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.416 அதிகரிப்பு ... தமிழகம், கேரளாவில் முட்டைவிலை 315 காசுகளாக நிர்ணயம் தமிழகம், கேரளாவில் முட்டைவிலை 315 காசுகளாக நிர்ணயம் ...
தமிழகத்தில் அரிசி விலை மீண்டும் குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2013
13:34

திருப்பூர்:" தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மணச்சநல்லூர், மதுரை வாடிப்பட்டி, கம்பம் பகுதியில் நடப்பாண்டு இறுதியில் நெல் வரத்து வழக்கத்தை விட நெல் வரத்து அதிகரிக்கும் என்பதால், அரிசி விலை மேலும் குறையும்,'' என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வணிகர் சம்மேளன மாநில செயலாளர் மோகன் கூறினார்.கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு மழை, கர்நாடகா, ஆந்திராவில் பெய்துள்ளது. அறிவிக்கப்பட்டதற்கு 10 நாட்கள் முன்னதாகவே தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டுகளை விட, தமிழகத்தில் அதிகளவு நெல் விளைச்சல் நடப்பு ஆண்டில் இருக்கும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வணிகர் சம்மேளன மாநில செயலாளர் மோகன் கூறுகையில், ""ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வழக்கமாக 2000 முதல் 2,500 லாரிகள், 17 டன் எடையுடன் நெல் ஏற்றி வரும். அக்., துவக்கத்தில் நெல் வரத்து அதிகரிக்கும். அதிக விளைச்சலால், நவ., மற்றும் டிச., மாதங்களில் 3,000 லாரிகள் வரை வரும். நெல்லுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்சாகத்துடன் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு இறுதியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மணச்சநல்லூர், மதுரை வாடிப்பட்டி, கம்பம் பகுதியில் இருந்து நெல் வரத்து கூடுதலாக இருக்கும். வழக்கத்தை விட நெல் வரத்து அதிகரிக்கும் என்பதால், புத்தாண்டு மற்றும் பொங்கல் துவங்கும் முன்பே, அரிசி விலை மேலும் குறையும்,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)