பதிவு செய்த நாள்
28 செப்2013
13:34
திருப்பூர்:" தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மணச்சநல்லூர், மதுரை வாடிப்பட்டி, கம்பம் பகுதியில் நடப்பாண்டு இறுதியில் நெல் வரத்து வழக்கத்தை விட நெல் வரத்து அதிகரிக்கும் என்பதால், அரிசி விலை மேலும் குறையும்,'' என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வணிகர் சம்மேளன மாநில செயலாளர் மோகன் கூறினார்.கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு மழை, கர்நாடகா, ஆந்திராவில் பெய்துள்ளது. அறிவிக்கப்பட்டதற்கு 10 நாட்கள் முன்னதாகவே தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டுகளை விட, தமிழகத்தில் அதிகளவு நெல் விளைச்சல் நடப்பு ஆண்டில் இருக்கும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வணிகர் சம்மேளன மாநில செயலாளர் மோகன் கூறுகையில், ""ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வழக்கமாக 2000 முதல் 2,500 லாரிகள், 17 டன் எடையுடன் நெல் ஏற்றி வரும். அக்., துவக்கத்தில் நெல் வரத்து அதிகரிக்கும். அதிக விளைச்சலால், நவ., மற்றும் டிச., மாதங்களில் 3,000 லாரிகள் வரை வரும். நெல்லுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்சாகத்துடன் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு இறுதியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மணச்சநல்லூர், மதுரை வாடிப்பட்டி, கம்பம் பகுதியில் இருந்து நெல் வரத்து கூடுதலாக இருக்கும். வழக்கத்தை விட நெல் வரத்து அதிகரிக்கும் என்பதால், புத்தாண்டு மற்றும் பொங்கல் துவங்கும் முன்பே, அரிசி விலை மேலும் குறையும்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|