பதிவு செய்த நாள்
28 செப்2013
13:47
மதுரை: கடந்த 2 மாதங்களில் ஒரு கிலோ வெண்ணெய்,நெய் விலை ரூ.100 உயர்ந்துள்ளது. ஆவின் நெய்க்கு வெளிமார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக, சில மாதங்களாக தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்து வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்களின் உற்பத்தியும் குறைந்தது. சென்னைக்கு பால் அனுப்ப வேண்டும் என்பதால், மதுரை ஆவினில் பால் பொருட்களின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், மாதம் ஒன்றுக்கு 30 டன் ஆவின் நெய் விற்பனையாகும். தீபாவளி நேரத்தில் 40 முதல் 45 டன் விற்பனையாகும்.ஆவின் நெய் ஒரு லிட்டர் (900 கிராம்)ரூ.290. இந்த நெய்யை அடைத்து விற்பனைக்கு அனுப்பும் "பிளாஸ்டிக் ஜார்' இல்லாததால் வெளிமார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வடமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால், 2 மாதத்திற்கு முன் கிலோ ரூ.240 க்கு விற்ற வெண்ணெய் படிப்படியாக உயர்ந்து, ரூ.340 ஆகியுள்ளது. உதிரியாக விற்கும் அக்மார்க் நெய் கிலோ ரூ.340 லிருந்து 450 ஆகவும், டின் நெய் கிலோ ரூ.540 க்கும் விற்கப்படுகிறது. பக்ரித்,தீபாவளி,கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நெய் தேவை அதிகம். வெளிமார்க்கெட்டில் மக்கள் வெண்ணெய், நெய் ஆகியவற்றை அதிகவிலைக்கு வாங்கி நஷ்டப்படுவதை தடுக்க, ஆவினில் தட்டுப்பாடு இல்லாமல் வெண்ணெய், நெய் விற்பனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|