மருந்துகள் 20 சதவீதம் விலை குறைப்பு நவ., 10 முதல் அமல்மருந்துகள் 20 சதவீதம் விலை குறைப்பு நவ., 10 முதல் அமல் ... நாட்டின் அன்­னிய செலா­வணி கையி­ருப்பு 203 கோடி டாலர் உயர்வு நாட்டின் அன்­னிய செலா­வணி கையி­ருப்பு 203 கோடி டாலர் உயர்வு ...
நாட்டின் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க...ஏற்­று­மதி மண்­டல நிறு­வ­னங்­க­ளுக்கு சலுகை வழங்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2013
01:15

புது­டில்லி:ஏற்­று­மதி மண்­ட­லங்­களில், ஏற்­று­மதி சார்ந்த பொருட்­களை தயா­ரிக்கும் தொழிற்­சா­லை­களை அமைப்­போ­ருக்கு, பல்­வேறு சலு­கைகள் வழங்க மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.ஏற்­று­ம­தியை அதி­க­ரித்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்­கு­றையை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில், ஊக்­கு­விப்பு நட­வடிக்கை எடுக்­கப்­பட உள்­ளது.
வரு­மான வரி விலக்கு:கடந்த, 1980ம் ஆண்டு, டிசம்­பரில், ஏற்­று­மதி செயல்­பாட்டு மண்­ட­லங்­களில் (இ.பி. இசட்.,) அமைக்­கப்­படும் ஏற்று­மதி சார்ந்த நிறு­வ­னங்கள் (இ.ஓ.யு.,) திட்டம் அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டது.இந்த, ஏற்­று­மதி மண்­ட­லங்­களில் அமைக்­கப்­படும் உற்­பத்தி சார்ந்த தொழிற்­சா­லை­க­ளுக்கு, பல்­வேறு சலு­கைகள் அறி­விக்­கப்­ பட்­டன.இத்­தொ­ழிற்­சா­லை­களில் இருந்து, வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்று­ம­தி­யாகும் பொருட்கள் மூலம் கிடைக்கும் லாபத்­திற்கு, 100 சத­வீத வரு­மான வரி விலக்கு சலுகை வழங்­கப்­பட்­டது.மேலும், இந்­நி­று­வ­னங்கள், வெளி­நா­டு­களில் இருந்து இறக்கு­மதி செய்யும் மூலப்­பொ­ருட்­களுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டது. இச்­ச­லு­கைகள் கார­ண­மாக, ஏற்­று­மதி மண்டலங்­களில், அதிக அளவில் சிறிய மற்றும் நடுத்­தர நிறுவனங்­களின் தொழிற்­சாலைகள் அமைந்­தன.
வேலை­வாய்ப்பு:தயா­ரிப்பு துறையின் உற்­பத்தி திறனை மேலும் உயர்த்­தவும், அன்­னிய முத­லீ­டு­களை ஈர்க்­கவும், உள்­நாட்டில் வேலை­வாய்ப்பை பெருக்­கவும், மேற்­கண்ட ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு மேற்­கொண்­டது.இதை­ய­டுத்து, நாடு முழு­வதும் ஏற்­று­மதி செயல்­பாட்டு மண்­ட­லங்கள் அதி­க­ளவில் உரு­வா­யின.கடந்த, 2009–10ம் நிதி­யாண்டு நில­வ­ரப்­படி, இத்­த­கைய மண்­ட­லங்­களில், ஏற்­று­மதி அடிப்­ப­டை­யி­லான, 2,586 தொழில் நிறு­வ­னங்கள் செயல்­பட்டு வந்­தன. இவை, அந்த நிதி­யாண்டில், 84,135 கோடி ரூபாய் மதிப்­பிற்கு, சரக்கு மற்றும் சேவை­களை ஏற்­று­மதி செய்­துள்­ளன.அது போன்று, மென்­பொருள் தொழில்­நுட்ப பூங்­காக்­களில் (எஸ்.டி.பி.எஸ்.,) உள்ள 8,121 நிறு­வ­னங்கள், 2.05 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்­று­மதி மேற்­கொண்­டன. மின்­னணு வன்­பொருள் தொழில்­நுட்ப பூங்­காக்­களில் (இ.எச்.டி.பி.எஸ்.,) உள்ள, 144 நிறு­வ­னங்கள், 8,028 கோடி ரூபாய் அள­விற்கு ஏற்­று­மதி வர்த்­தகம் புரிந்­துள்­ளன.
ஆர்வம் குறைந்தது:இந்த நிலையில், ஏற்­று­மதி செயல்­பாட்டு மண்­ட­லங்­களில் அமைந்­துள்ள, நிறு­வ­னங்­க­ளுக்­கான, 30 ஆண்டு வரிச் சலுகை காலம், கடந்த 2010ம் ஆண்­டுடன் முடி­வ­டைந்­தது.இதனால், 2010ம் ஆண்­டிற்கு பிறகு, இத்­த­கைய மண்­ட­லங்­களில், ஏற்­று­மதி சார்ந்த தொழிற்­சா­லைகள் அமைப்­ப­தற்­கான ஆர்வம், தொழில்­மு­னை­வோ­ருக்கு குறைந்­தது. மேலும், இத்­த­கைய மண்­ட­லங்­களில், அன்­னிய முதலீ­டு­களும் குறைந்­தன.இதை­ய­டுத்து, மத்­திய அரசு, கடந்த 2011ம் ஆண்டு, ஏற்­று­மதி சார்ந்த தொழிற்­சா­லைகள் திட்­டத்தை, மறு­சீ­ர­மைக்க, குழு ஒன்றை நிய­மித்­தது. இக்­குழுவின் தலை­வ­ராக, நொய்டா சிறப்பு பொரு­ளா­தார மண்­டல மேம்­பாட்டு ஆணை­ய­ரான எஸ்.சி. பாண்டா, நிய­மிக்­கப்­பட்டார்.சேவை வரி:இக்­குழு, ஏற்­று­மதி சார்ந்த நிறுவ­னங்­க­ளுக்கு, சுங்கம், உற்பத்தி மற்றும் சேவை வரி­களில் இருந்து விலக்­க­ளிப்­பது உள்­ளிட்ட பல்­வேறு சலு­கைகள் அடங்­கிய, 32 அம்ச பரிந்­து­ரை­களை மத்­திய அர­சுக்கு வழங்­கி உ­ள்­ளது.
அந்த அறிக்­கையில், ஏற்­று­மதி மண்­ட­லங்­களில் தொழிற்­சா­லை­களை அமைப்­ப­தற்­கான நடை­மு­றை­களை எளி­மைப்­ப­டுத்த வேண்டும்; போக்­கு­வ­ரத்து செல­வு­களை குறைக்க, நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பது உள்­ளிட்ட அம்­சங்கள் இடம்­பெற்­றுள்­ளன.ஏற்­று­மதி மண்­ட­லங்­களில் தொழிற்­சா­லைகள் அமைக்­கவும், வெளிப்­பு­றத்தில் கிடங்கு வசதிகள் ஏற்­ப­டுத்­தவும் மற்றும் இதர வச­தி­களை, மென்­பொருள் மற்றும் வன்­பொருள் தொழில்­நுட்ப பூங்காக்­க­ளுடன் பகிர்ந்து கொள்ள வசதி செய்ய வேண்டும். இவற்றுக்­கான, நிர்வாக நடை­முறை, மண்­ட­லங்­க­ளி­டையே பார­பட்­ச­மின்றி, ஒரே சீராக இருக்க வேண்டும்.இப்­ப­ரிந்­து­ரை­களை அமல்­ப­டுத்தும் பட்­சத்தில், ஏற்­று­மதி மண்­ட­லங்­களில், தொழிற்­சாலைகள் அமைக்க, தொழில்­மு­னைவோர் ஆர்­வத்­துடன் முன் வருவர்; இம்­மண்­ட­லங்­களில் அன்­னிய நேரடி முத­லீடு அதி­க­ரிக்கும் எனவும், பாண்டா குழு தெரி­வித்­துள்­ளது.
விதிமுறைகள்:இது­கு­றித்து, மத்­திய வர்த்­தகம் மற்றும் வருவாய் துறை அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது;ஏற்­று­மதி சார்ந்த நிறு­வ­னங்­க­ளுக்­கான, விதி­மு­றை­களை எளி­மைப்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை, அரசு பரி­சீ­லித்து வரு­கி­றது. இதன் மூலம், ஏற்­று­மதி மண்­ட­லங்­களில் தற்­போது குறைந்­துள்ள, முதலீ­டுகள் அதி­க­ரிக்கும். அதே சமயம், இந்த மண்­ட­லங்­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, வரிச்­ச­லு­கைகள் வழங்க அரசு விரும்பாது என்று தெரி­கி­றது.
முத­லீடு சார்ந்த சலு­கைகள் வழங்கவே, அரசு விரும்பும். அடுத்த, 10 நாட்­க­ளுக்குள் அனைத்து அம்­சங்கள் குறித்தும் முடி­வெ­டுக்­கப்­பட்டு, அறி­விப்பு வெளி­யாகும். இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.நடப்பு 2013–14ம் நிதி­ஆண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை­யி­லான ஐந்து மாதங்­களில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்­று­மதி, 3.89 சத­வீதம் உயர்ந்து, 12,440 கோடி டால­ராக அதிக­ரித்­து உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)