பதிவு செய்த நாள்
01 அக்2013
00:31
சேலம்:பண்டிகை காலம் துவங்கி விட்டதால், தேங்காய் விலை, வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தேங்காய் உற்பத்தி குறைவே, விலை உயர்வுக்கு காரணம் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.தமிழகத்தில் கோவை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, வேலுார், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு தேங்காய் உற்பத்தியாகிறது.உள்நாட்டில் உற்பத்தியாகும் மொத்ததேங்காயில், எண்ணெய்க்காக, 65 – 70 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது.
சேலம் சந்தையில் தேங்காய் ஒன்று, ௭ ரூபாய் முதல் 15 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. மிகவும் சிறிய தேங்காய் மட்டும் நான்கு, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை வருவதால், தேங்காய் மற்றும் கொப்பரைக்கு தேவை அதிகரித்து, அதன் விலை மேலும் உயரும் என்பதில் சந்தேகமில்லை.
சேலம் வ.உ.சி., சந்தை, தேங்காய் மண்டி வியாபாரிகள் கூறியதாவது:கடந்தாண்டு மிகவும் குறைவாகவே மழை பெய்தது. இதனால், தமிழகம்மற்றும் கேரள மாநிலங்களில், தேங்காய் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு தேங்காய் வரத்து குறைந்தது.சேலம் மாவட்டத்தில் பேளூர், வாழப்பாடி, அயோத்தியா பட்டணம், குப்பனுார் பகுதிகளில் உள்ள தென்னைதோப்புகளுக்கு, வியாபாரிகள் நேரடியாக சென்று தேங்காய்களை, வாங்கி வருகின்றனர்.
கடந்தாண்டு இதே கால கட்டத்தில், 1,000 தேங்காய், 3,500 முதல் 4,000 ரூபாய் வரை, வியாபாரிகள் வாங்கினர். இந்த ஆண்டு உற்பத்தி குறைவால், 1,000 தேங்காய், 8,000 முதல் 9,000 ரூபாய் வரை விலை போகிறது. பண்டிகை காலம் நெருங்கி விட்டதால், தேங்காய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|