பதிவு செய்த நாள்
01 அக்2013
00:34
சென்னை:நிதிச் சந்தையில், கட்டுப்பாடற்ற நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளால், ஏராளமான நுகர்வோர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என, மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம் தெரிவித்தார்.சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:நிதித் துறை, வேகமாக, வெவ்வேறு பரிமாணங்களில் செயல்பட்டு, புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதில், சில சமயம், வரைமுறைக்கு உட்படாத வாய்ப்புகளும் உருவாகின்றன. இந்த வாய்ப்பை, கட்டுப்பாடில்லாமல் செயல்படும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.இத்தகைய நிறுவனங்கள், சந்தையின் ஒழுக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு, ஸ்திரத்தன்மைஅற்ற நிலையை உருவாக்குகின்றன. இது போன்ற நடவடிக்கைகள், ஏராளமான நுகர்வோரை பாதிக்கக்கூடியதாக உள்ளன. இது, நிதிச் சந்தையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மீதான நுகர்வோரின் நம்பிக்கையை குறைக்கிறது. இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|