பதிவு செய்த நாள்
01 அக்2013
00:36
புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 13,228 கோடி ரூபாயை ( 200 கோடி டாலர்) இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன என, ‘செபி’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றது முதல், ரூபாய் மதிப்பை உயர்த்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் பயனாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க மத்திய வங்கியும், ஊக்குவிப்பு திட்ட சலுகைகள் மாற்றமின்றி, அதே நிலையில் தொடரும் என்று அறிவிப்பு செய்தது. இதுவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மதிப்பீட்டுமாதத்தில், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொள்வதற்கு, துாண்டு கோலாக அமைந்தது.இருப்பினும், சென்ற செப்டம்பரில், அன்னிய நிதி நிறுவனங்கள், கடன்பத்திர சந்தைகளிலிருந்து, 6,016 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன.இதையடுத்து, அம்மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர முதலீடு, 7,213 கோடி ரூபாயாகஉள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|