பதிவு செய்த நாள்
01 அக்2013
00:39
மும்பை:நடப்பு 2013 – 14ம் நிதிஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன்வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.9 சதவீதமாக (2,180 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.இது, சென்ற 2012 – 13ம் நிதியாண்டின் இதே காலத்தில், 4 சதவீதமாக (1,690 கோடி டாலர்) இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இறக்குமதி:இதுகுறித்து, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை :மதிப்பீட்டு காலத்தில், இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதிகுறைந்துள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது.முதல் காலாண்டில், தங்கம் இறக்குமதி, 730 கோடி டாலராக உள்ளது. இதை தவிர்த்து பார்த்தால், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை , 3.2 சதவீதமாக (1,450 கோடி டாலர்) இருக்கும்.மதிப்பீட்டு காலத்தில், ஏற்றுமதி,1.5 சதவீதம் சரிவடைந்து, 7,390 கோடி டாலராக உள்ளது.
இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 4.8 சதவீதமாக (7,500 கோடி டாலர்) இருந்தது,அதே சமயம், இதே காலத்தில், இறக்குமதி, 3.9 சதவீதத்தில் (11,890 கோடி டாலர்) இருந்து, 4.7 சதவீதமாக (12,220 கோடி டாலர்) உயர்ந்துள்ளது.இதே காலத்தில், வர்த்தக பற்றாக்குறை, மதிப்பின் அடிப் படையில், 4,380 கோடி டாலரில் இருந்து, 5,050 கோடி டாலராக அதிகரித்துள்ளது.சேவைகள் ஏற்றுமதி, 6.1 சதவீதத்தில் (3,580 கோடி டாலர்) இருந்து, 2.1 சதவீதமாக (3,650 கோடி டாலர்) குறைந்துள்ளது.
சேவைகள்:அதே சமயம், சேவைகள் இறக்குமதி, 19.3 சதவீதத்தில் (2,080 கோடி டாலர்) இருந்து, 5.5 சதவீதமாக (1.970 கோடி டாலர்) ஆக, சரிவடைந்துள்ளது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், சேவைகள் வாயிலான நிகர வருவாய், 1,500 கோடியில் இருந்து, 1,690 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், நிகர அன்னிய நேரடி முதலீடு, 380 கோடி டாலரில் இருந்து, 650 கோடி டாலராக உயர்ந்துள்ளது.அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர முதலீடு, 25.2 சதவீதம் உயர்ந்து, 1,640 கோடியில் இருந்து, 2,050 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
அன்னிய நேரடி முதலீடு மற்றும் வங்கிகள் வாங்கிய கடன் அதிகரித்துள்ளதால், நிகர முதலீடு உயர்ந்துள்ளது.வங்கிகளின் நிகர அன்னிய கடன், 57 சதவீதம் அதிகரித்து, 300 கோடி டாலரில் இருந்து, 470 கோடி டாலராக உயர்ந்துள்ளது.வர்த்தக கடன்:அதே சமயம், நிகர அன்னியவர்த்தக கடன், மாற்றம் எதுவும்இன்றி, 44 கோடி டாலராக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2012 – 13ம் நிதிஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதம் அல்லது 8,800 கோடி டாலராக இருந்தது.நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, சரிவடைய துவங்கியது.இதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, தங்கம், தங்க ஆபரணங்கள் போன்றவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது.நடப்பு, 2013 – 14ம் நிதிஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 3.7 சதவீதம் அல்லது 7,000 கோடி டாலராக குறைக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை:நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), நாட்டின் நிதி பற்றாக்குறை, 4.4 லட்சம் கோடி ரூபாயாகவும், வருவாய் பற்றாக்குறை, 3.31 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளன. இவை, முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் இலக்கில் முறையே, 74.6 சதவீதம் மற்றும் 87.4 சதவீதம் என்ற அளவில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|