பதிவு செய்த நாள்
01 அக்2013
00:42
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான, நேற்று மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்காவின் நிதிச் செலவின கோரிக்கைக்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் எதிரொலியாக, இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகளில், வர்த்தகம்சரிவுடன் முடிவடைந்தன.குறிப்பாக, ‘சென்செக்ஸ்’ 1.76 சதவீதம் சரிவுடனும், ‘நிப்டி’, 1.68 சதவீதம் சரிவுடனும் முடிவடைந்தன.
நேற்றைய வியாபாரத்தில், பொறியியல், வங்கி, உலோகம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. எனினும், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 347.50 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,379.77 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிக பட்சமாக, 19,651.31 புள்ளிகள் வரையிலும்,குறைந்தபட்சமாக, 19,320.73 புள்ளிகள் வரையிலும் சென்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள்,டாட்டா ஸ்டீல், பீ.எச்.இ.எல்., கோல் இந்தியா உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், இந்துஸ்தான் யூனிலிவர், சன்பார்மா, இன்போசிஸ் உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 97.90 புள்ளிகள் சரிவடைந்து, 5,735.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,810.20 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,718.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|