பதிவு செய்த நாள்
02 அக்2013
00:15
மும்பை:நடப்பாண்டு ஜூலை மாதம் வரையிலுமாக, உள்நாட்டில் புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை, 1.88 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பாண்டு ஜூலை வரையிலான ஓராண்டு காலத்தில், கூடுதலாக, 7 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை விட, 3.5 சதவீதம் அதிகமாகும்.இருப்பினும், நடப்பாண்டு, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களில, புதிதாக கிரெடிட் கார்டுகள் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஓராண்டு காலத்தில், கிரெடிட் கார்டுகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட வர்த்தக மதிப்பு, 12 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், கிரெடிட் கார்டுகள் வாயிலாக, சராசரியாக மேற் கொள்ளப்பட்ட வர்த்தகத்தின் மதிப்பு, 5,870 ரூபாயாக இருந்தது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 6 சதவீதம் அதிகம் என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|