பதிவு செய்த நாள்
02 அக்2013
00:17
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று உயர்ந்தது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 62.62 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 15 காசுகள் அதிகரித்து, 62.47ல் நிலை கொண்டது.
அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, முன் தினத்தை விட, 10 காசுகள் அதிகரித்து, 62.52 ஆக இருந்தது. இது, வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 62.16 வரை சென்றது.நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, எதிர்பார்த்ததை விட, குறைவான அளவிற்கே உயர்ந்துள்ளது.மேலும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் நடவடிக்கையால், இரண்டாவது காலாண்டில், இறக்குமதி குறைந்திருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது போன்ற காரணங்களால், நேற்று பங்குச் சந்தையில் எழுச்சியும், அதன் தாக்கத்தால், ரூபாய் மதிப்பு உயர்ந்தும் காணப்பட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|