பதிவு செய்த நாள்
02 அக்2013
00:24
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதை அடுத்து, ‘சென்செக்ஸ்’, 0.71 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தில், வங்கி, ரியல் எஸ்டேட் மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், பொதுத் துறை, எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 137.38 புள்ளிகள் அதிகரித்து, 19,517.15 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங் களுள், எச்.டீஎப்.சி., பேங்க், பீ.எச்.இ.எல்., மாருதி உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டா பவர், சேசகோவா, என்.டி.பி.சி., உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 44.75 புள்ளிகள் உயர்ந்து, 5,780.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|