பதிவு செய்த நாள்
04 அக்2013
16:34
ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட், நாட்டின் மிகப்பெரிய ஜெனரல் இன்சுரன்ஸ் லிமிடெட், நாட்டின் மிகப்பெரிய ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமாக திகழ்கிறது. அந்நிறுவனம் தற்போது, தன் கார் இன்சுரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கென, ஒரு புதிய கவரேஜ் திட்டத்தை வழங்குகிறது. சாலையோரத்தில் துணைபுரிதல் என்கிற கவரேஜ் மூலம், ஆபத்து மற்றும் அவசரகாலத்தில் உதவுவது. உதாரணமாக வாகனம் பிரேக் டவுன் மற்றும் விபத்து ஏற்படும்போது, இதற்கென புதிய கவரேஜ் 99 ரூபாயில் துவங்குகிறது. எந்த கார் பிராண்ட் ஆனாலும், மாடல் ஆனாலும் இந்த கவரேஜ் கிடைக்கும்.
புதிய கவரேஜ் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:
* இன்சூரன்ஸ் செய்யப்பட்ட காரில் பிரேக் டவுன்/விபத்து ஏற்பட்டால் அந்த நேரத்தில், நீங்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
* அப்படி இல்லையென்றால், வேறு வாகனம் அதாவது டாக்ஸி போன்றவை ஏற்பாடு செய்து தரப்படும்.
* பிரேக் டவுனில் உதவி செய்யும் நோக்கோடு, சிறிய பழுது என்றால் தொலைபேசி வழியிலே அல்லது அந்த இடத்திற்கு நேரிலேயே வந்து பழுது நீக்கப்படும்.
* அவசர தேவைக்கான எரிபொருள் வழங்கப்படும்.
* அருகிலுள்ள கேரேஜ்க்கு, தொலைபேசி வழியே தகவல் தெரிவிக்கப்படும்.
* எஸ்.ஓ.எஸ்., மெசேஜ் மூலம், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரேக் டவுன் குறித்த தொடர் தகவல் தெரிவிக்கப்படும்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு உகந்த இன்சூரன்ஸ் என்றவாறு, பல விருதுகளை பெற்றுள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ., லம்போர்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின், இப்புதிய கவரேஜ் மூலம் கூடுதல் பலன் வாடிக்கையாளருக்கு கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|