ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு ... தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முன்னிலை தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முன்னிலை ...
அணுமின் உற்பத்தியை 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2013
00:23

புதுடில்லி:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012–2017), நாட்டின் அணுமின் உற்பத்தியை, 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்த, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.எல்.,) திட்டமிட்டுள்ளது.
தற்போது, உள்நாட்டில், 19 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வாயிலாக, 4,780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணு உலைகள்:இந்நிலையில், நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், கூடுதலாக, 16 அணு உலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.இதையடுத்து, நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த அணுமின் உற்பத்தி, 16 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரிக்கும்.
வரும் 2022ம் ஆண்டில், அணுமின் திட்டங்கள் வாயிலாக, 20 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்ய, என்.பி.சி.ஐ.எல்., நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உள்நாட்டில் அணு உலைகளின் செயல்பாட்டிற்கான யுரேனியம், ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர். மாவட்டம்,
துமலப்பள்ளி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் சடுகுடா ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுகிறது.
உள்நாட்டில், அணுமின் திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இவற்றிற்கு போதிய அளவிற்கு யுரேனியம் கிடைக்காததால் , தற்போது, நம்நாடு, ரஷ்யா, பிரான்ஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்கிறது.
ஒப்பந்தம்:கடந்த 2009ம் ஆண்டில், இந்தியா, அமெரிக்காவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், 45 உறுப்பு நாடுகள், இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய இசைவு அளித்துள்ளன.முன்பு இந்தியாவிற்கு, யுரேனியத்தை அளித்து வந்த, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேற்கண்ட ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்பு தெரிவித்தன.இந்நாடுகளும், தற்போது, இந்தியாவிற்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றன.
இறக்குமதி:இந்நிலையில், இந்திய அணு எரிசக்தி துறை, மத்திய ஆசிய நாடுகள், ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து, யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து, ஆய்வு செய்து வருகிறது.வரும் 2014ம் ஆண்டில, உஸ்பெஸ்கிஸ்தானிலிருந்து, 2,000 டன் யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ள, மத்திய அரசு, திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)