பதிவு செய்த நாள்
05 அக்2013
00:26
புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பங்குகளை ஒதுக்கீடு செய்து, 1,062 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.
இது, இதற்கு முந்தைய, ஜூலை மாதத்தில், 1,605 கோடி ரூபாயாக இருந்தது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.சென்ற மே மாதத்தில், இந்திய நிறுவனங்கள், முன்னுரிமை பங்கு வெளியீடு வாயிலாக, மிகவும் அதிகபட்சமாக, 11,878 கோடி ரூபாயை திரட்டிஇருந்தன.
கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு, சென்ற ஆகஸ்ட்மாதத்தில் தான், முன்னுரிமை பங்கு வெளியீடு வாயிலாக, நிறுவனங்கள் திரட்டிய தொகை, மிகவும் சரிவடைந்துள்ளது.சென்ற ஜூலை மாதத்தில், 27 நிறுவனங்கள் முன்னுரிமை பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. இது, ஆகஸ்ட் மாதத்தில், 35 ஆக உயர்ந்துள்ளது.
நடப்பு 2013–14ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில்,188 நிறுவனங்கள், முன்னுரிமை பங்குகளை ஒதுக்கீடு செய்து, 30,560 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன என, ‘செபி’ அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|