பதிவு செய்த நாள்
05 அக்2013
00:34

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், மதியத்திற்கு பிறகு வர்த்தகம் சுணக்கம் கண்டது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் மற்றும் உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.
அதேசமயம், மின்சாரம், வங்கி, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 13.88 புள்ளிகள் உயர்ந்து, 19,915.95 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிக பட்சமாக, 20,052 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,833.17 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கோல்இந்தியா, ஹிண்டால்கோ, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாக்டர் ரெட்டீஸ், ஜிந்தால் ஸ்டீல், எல் அண்டு டி உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 2.40 புள்ளிகள் குறைந்து, 5,907.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,950.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,885 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|