அணுமின் உற்பத்தியை 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்த திட்டம்அணுமின் உற்பத்தியை 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்த திட்டம் ... தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முன்னிலை தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முன்னிலை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ்’ உயர்வு, ‘நிப்டி’ சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2013
00:34

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், மதியத்திற்கு பிறகு வர்த்தகம் சுணக்கம் கண்டது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் மற்றும் உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.
அதேசமயம், மின்சாரம், வங்கி, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 13.88 புள்ளிகள் உயர்ந்து, 19,915.95 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிக பட்சமாக, 20,052 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,833.17 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கோல்இந்தியா, ஹிண்டால்கோ, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாக்டர் ரெட்டீஸ், ஜிந்தால் ஸ்டீல், எல் அண்டு டி உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 2.40 புள்ளிகள் குறைந்து, 5,907.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,950.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,885 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)