அன்­னிய செலா­வணி கையி­ருப்பு 27,626 கோடி டால­ராக சரிவுஅன்­னிய செலா­வணி கையி­ருப்பு 27,626 கோடி டால­ராக சரிவு ... ஸ்டுடியோ துவங்க ரூ.15 லட்சம்: கோ ஆப்டெக்சுக்கு நிதியுதவி ஸ்டுடியோ துவங்க ரூ.15 லட்சம்: கோ ஆப்டெக்சுக்கு நிதியுதவி ...
டாஸ்மாக் சரக்கு விற்பனையில் தொடர் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2013
12:41

போலி சரக்கு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை, தொடர்ந்து, சரிவடைந்து வருகிறது.

தமிழகத்தில் 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன. டாஸ்மாக் கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.,) மற்றும் பீர் வகைகள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்படுகின்றன. சென்ற செப்டம்பர் மாதம், 2.88 கோடி பாட்டில்களை உள்ளடக்கிய, 24 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதன் மதிப்பு, 288 கோடி ரூபாய். அதேசமயம், கடந்த ஆகஸ்ட் மாதம், 324 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது.

இது, கடந்த ஜூலை மாதம், 29 லட்சம் பெட்டிகளாக இருந்தது. மது வகைகள் விற்பனை, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே, 46 லட்சம், 45 லட்சம் மற்றும், 43 லட்சம் பெட்டிகள் குறைந்துள்ளன. டாஸ்மாக் விற்பனை தொடர் சரிவுக்கு, போலி சரக்கு விற்பனையே காரணம் என, கூறப்படுகிறது.

அண்டை மாநில சரக்கை பார்களில் நேரடியாக விற்பனை செய்தல், வெளி மாநில சரக்கை, கடைகளில் உள்ள காலி பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தல், போலி சரக்கை விற்பனை செய்தல் போன்ற, மூன்று விதமான முறைகேடுகள், தொடர்ந்து நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான, 'குடிமகன்'கள் தங்கள் செலவை குறைத்துள்ளனர். இதுவும், சரக்கு விற்பனை சரிவுக்கு காரணம் என, தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனம், சில்லரை விற்பனையில் மதுபான கடையை துவக்கிய போது, அதன் விற்பனை மற்றும் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட எஸ்.பி.யுடன், தொடர்ந்து, கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். அப்போது, உள்ளூர் பிரச்னை முதல், அனைத்து விவரங்களும் துல்லியமாக பரிமாறி கொள்ளப்பட்டது. தற்போது, டாஸ்மாக் ஆய்வு கூட்டங்களில், மது விலக்கு போலீசார் மட்டுமே பங்கேற்கின்றனர். இவர்கள், எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கண்காணிப்பு பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து, சுலபமாக சரக்குகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

-நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)